சத்தீஸ்கர் முதல்வராக, விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு!

vishnu dev sai - 2026
#image_title

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது!

சத்தீஸ்கரில், புதிய முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவர்.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.7 மற்றும் 17ல், இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இவை எண்ணப்பட்டு, கடந்த டிச.3ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. பெரும்பான்மையைக் கடந்து 54 தொகுதிகளை வென்ற பாஜக., சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க உள்ளது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சட்டசபைக்கு புதிதாக தேர்வாகியுள்ள பாஜக., – எம்எல்ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய மேற்பார்வையாளர்களான மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனவால், பாஜக., பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கௌதம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் பாஜக., எம்எல்ஏ.,க்களிடம் தனித்தனியாகவும், கூட்டமாகவும் கேட்டறிந்தனர்.

இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்களை நியமிக்க முடிவு செய்யப் பட்டது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சத்தீஸ்கரில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கும் விஷ்ணு தேவ் ஸாய் நடந்து முடிந்த தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில பாஜக., தலைவராக பதவி வகித்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

எஃகு, சுரங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

கடந்த 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தப்காரா தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories