விசாரணைக்கு டிமிக்கி கொடுத்த ‘கெட்டி’ கார்த்தி: டிவிட்டர் பதிவிட்டு மாட்டுகிறார்!

புது தில்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுப் புகாரில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சிபிஐ.,யால் கைது செய்யப் பட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். அவரை உடனே தில்லிக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் நீதிமன்றக் காவல் பெற்றது சிபிஐ., ஆனால் சிபிஐ நினைத்தது நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் கெட்டியாக இருந்த கார்த்திதான்!

இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ., கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும், கார்த்தி சிதம்பரத்திடம் ஒரு நாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிபிஐ தரப்பு வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியும் 1 நாள் காவல் மட்டுமே வழங்கியது நீதிமன்றம். அதற்கு நீதிபதி விடுப்பில் இருப்பதால், மாற்று நீதிபதியின் உத்தரவைப் பெற்றதாகக் கூறப்பட்டது.

karthi arrest - 2026

இந்நிலையில் இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கார்த்தி சிதம்பரம் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் வந்து பார்வையாளர் மாடத்தில் இருந்த படி பார்த்தார்.

முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், ‘தான் இருப்பதாகவும்’, அஞ்சாமல் வழக்கை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, கார்த்தி சிதம்பரத்தின் தாயார், நளினி சிதம்பரமும் நீதிமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைப் பார்வையிட்டார்.

நேற்று இரவு கார்த்தி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போது அவர் உடல் நலம் பற்றி எந்தக் குறையும் சொல்லாத நிலையில், டாக்டர் ஷகில் அகமது அவரை இதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும், இன்று காலை 7.50 மணிக்கு தான் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகம் அழைத்து வரப் பட்டதாகவும், காலை 10 மணி வரை அவர் வெளியில் வருவதற்குத் தயாரானார் என்றும், எனவே சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் எந்த ஒரு விசாரணையும் நடத்த முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

karthi tweet12 horz - 2026

இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்க்வியின் டிவிட்டர் பக்கத்தில் சிலர் கார்த்தி டிவிட்டரில் கூறியதாக சிலவற்றை முன்வைத்துள்ளனர்.

நீங்கள் நீதிமன்றத்தில் உங்கள் க்ளையண்ட் உலகளாவிய ஹெச்என்ஐ (High Net worth Individual) வைத்திருப்பதாகவும், எந்த நாடுகளுக்கும் செல்வதற்கு/ வெளியே வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். அதை நினைவில் கொள்ளவும்.

மேலும், அவர் டாலரில் வெல் செட்டில் ஆனவர் என்று அவரே கூறியிருக்கிறார் என்பதையும் நீதிமன்றத்தில் குறிப்பிடவும் என்று நக்கல் அடித்திருக்கிறார்கள்.

அதற்காக ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டையும் இணைத்திருக்கிறார்கள். அதில் தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் உரையாடிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. இவற்றை முன்வைத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் சிலர்.

s - 2026

ஆயினும் அபிஷேக் மனு சிங்க்வியோ, இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் மட்டுமே கார்த்திக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் வாதிட்டு வருகிறார். மேலும், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் எப்படி லீக் ஆனது என்றும், அது எப்படி வாட்ஸ் அப்களில் சுற்றி வருகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இதனிடையே தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஜாமீன் மனு விவகாரத்தில் தனது உத்தரவை நிறுத்தி வைத்து, மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையில்  வைக்க அனுமதி அளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories