விசாரணைக்கு டிமிக்கி கொடுத்த ‘கெட்டி’ கார்த்தி: டிவிட்டர் பதிவிட்டு மாட்டுகிறார்!

புது தில்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுப் புகாரில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சிபிஐ.,யால் கைது செய்யப் பட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். அவரை உடனே தில்லிக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் நீதிமன்றக் காவல் பெற்றது சிபிஐ., ஆனால் சிபிஐ நினைத்தது நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் கெட்டியாக இருந்த கார்த்திதான்!

இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ., கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும், கார்த்தி சிதம்பரத்திடம் ஒரு நாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிபிஐ தரப்பு வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியும் 1 நாள் காவல் மட்டுமே வழங்கியது நீதிமன்றம். அதற்கு நீதிபதி விடுப்பில் இருப்பதால், மாற்று நீதிபதியின் உத்தரவைப் பெற்றதாகக் கூறப்பட்டது.

karthi arrest - 2026

இந்நிலையில் இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கார்த்தி சிதம்பரம் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் வந்து பார்வையாளர் மாடத்தில் இருந்த படி பார்த்தார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், ‘தான் இருப்பதாகவும்’, அஞ்சாமல் வழக்கை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, கார்த்தி சிதம்பரத்தின் தாயார், நளினி சிதம்பரமும் நீதிமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைப் பார்வையிட்டார்.

நேற்று இரவு கார்த்தி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போது அவர் உடல் நலம் பற்றி எந்தக் குறையும் சொல்லாத நிலையில், டாக்டர் ஷகில் அகமது அவரை இதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும், இன்று காலை 7.50 மணிக்கு தான் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகம் அழைத்து வரப் பட்டதாகவும், காலை 10 மணி வரை அவர் வெளியில் வருவதற்குத் தயாரானார் என்றும், எனவே சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் எந்த ஒரு விசாரணையும் நடத்த முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

karthi tweet12 horz - 2026

இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்க்வியின் டிவிட்டர் பக்கத்தில் சிலர் கார்த்தி டிவிட்டரில் கூறியதாக சிலவற்றை முன்வைத்துள்ளனர்.

நீங்கள் நீதிமன்றத்தில் உங்கள் க்ளையண்ட் உலகளாவிய ஹெச்என்ஐ (High Net worth Individual) வைத்திருப்பதாகவும், எந்த நாடுகளுக்கும் செல்வதற்கு/ வெளியே வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். அதை நினைவில் கொள்ளவும்.

மேலும், அவர் டாலரில் வெல் செட்டில் ஆனவர் என்று அவரே கூறியிருக்கிறார் என்பதையும் நீதிமன்றத்தில் குறிப்பிடவும் என்று நக்கல் அடித்திருக்கிறார்கள்.

அதற்காக ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டையும் இணைத்திருக்கிறார்கள். அதில் தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் உரையாடிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. இவற்றை முன்வைத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் சிலர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

s - 2026

ஆயினும் அபிஷேக் மனு சிங்க்வியோ, இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் மட்டுமே கார்த்திக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் வாதிட்டு வருகிறார். மேலும், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் எப்படி லீக் ஆனது என்றும், அது எப்படி வாட்ஸ் அப்களில் சுற்றி வருகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இதனிடையே தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஜாமீன் மனு விவகாரத்தில் தனது உத்தரவை நிறுத்தி வைத்து, மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையில்  வைக்க அனுமதி அளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories