சிலை அரசியல்: திரிபுராவில் தேள் கொட்டியது; கேரளத்தில் நெறி கட்டியது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

திருவனந்தபுரம்:

திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்களை வெளியேற்றி இப்போது பாஜக., ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் அடையாளமான லெனின் சிலையை தொண்டர்கள் சிலர் அப்புறப் படுத்தியுள்ளனர். இது தேசிய அளவில் பெரிய பரபரப்பையும், எதிர்வினையையும் நிகழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிலை அரசியல் துவங்கிவிட்டது.

உ.பி.யில் அம்பேத்கர் சிலை, மேற்கு வங்கத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி சிலை, தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில், கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமான கேரளத்தில், இப்போது காந்தி சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது தொடர்கிறது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தலிபரம்பா பகுதியில் மகாத்மா காந்தி சிலையின் கண்ணாடியை மர்ம நபர்கள் சேதபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள பாஜக,வின் மாநில பொதுச்செயலர் கே.சுரேந்திரன் இடு குறித்து ஒரு பதிவினை டிவிட்டரில் இட்டுள்ளார். அதில், லெனின் சித்தாந்தம் கோடிக் கணக்கானவர்களை கொன்றுள்ளது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பல நாடுகளில் லெனின் சிலைகளை மக்கள் அப்புறப் படுத்தியுள்ளனர். இங்கே சா.கிருஷ்ணப் பிள்ளையின் சிலையை எரித்தவர்கள்தான், இப்போது லெனின் சிலை அகற்றப் பட்டதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது கேரளத்தில் காந்தி சிலையும் தாக்குதல் பட்டியலில் இருப்பது கவனத்துக்குரியது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

 

Related articles

Recent articles

spot_img