January 20, 2025, 5:50 PM
28.2 C
Chennai

சிலை அரசியல்: திரிபுராவில் தேள் கொட்டியது; கேரளத்தில் நெறி கட்டியது!

திருவனந்தபுரம்:

திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்களை வெளியேற்றி இப்போது பாஜக., ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் அடையாளமான லெனின் சிலையை தொண்டர்கள் சிலர் அப்புறப் படுத்தியுள்ளனர். இது தேசிய அளவில் பெரிய பரபரப்பையும், எதிர்வினையையும் நிகழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிலை அரசியல் துவங்கிவிட்டது.

உ.பி.யில் அம்பேத்கர் சிலை, மேற்கு வங்கத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி சிலை, தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில், கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமான கேரளத்தில், இப்போது காந்தி சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது தொடர்கிறது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தலிபரம்பா பகுதியில் மகாத்மா காந்தி சிலையின் கண்ணாடியை மர்ம நபர்கள் சேதபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள பாஜக,வின் மாநில பொதுச்செயலர் கே.சுரேந்திரன் இடு குறித்து ஒரு பதிவினை டிவிட்டரில் இட்டுள்ளார். அதில், லெனின் சித்தாந்தம் கோடிக் கணக்கானவர்களை கொன்றுள்ளது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பல நாடுகளில் லெனின் சிலைகளை மக்கள் அப்புறப் படுத்தியுள்ளனர். இங்கே சா.கிருஷ்ணப் பிள்ளையின் சிலையை எரித்தவர்கள்தான், இப்போது லெனின் சிலை அகற்றப் பட்டதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது கேரளத்தில் காந்தி சிலையும் தாக்குதல் பட்டியலில் இருப்பது கவனத்துக்குரியது.

ALSO READ:  IND Vs AUS Test: முதல் நாளிலேயே படபடவென சரிந்த விக்கெட்டுகள்!

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...