IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

Published:

aus vs india - 2026
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – இரண்டாம் நாள் – பெர்த்-23.11.2024– இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் விக்கட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்; ஆஸ்திரேலியஅணி முதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க்26, ட்ராவிஸ் ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா3/48). இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 27 ஓவர்களில்67/7 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்திருந்தது. இன்று பும்ராவின் முதல்ஓவர் முதல் பந்தில் அலக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். இன்றைய ஏழாவது ஓவரில் அதாவது33.2 ஆவது ஓவரில் நாதன் லியன் (5 ரன்) ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் 17ஓவர்கள் ஆடினர்;25 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அவர்களால் ரன்அதிகம் அடிக்க முடியவில்லை. 46 ரன்கள் லீடோடு இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடவந்தது.

          இரண்டாவது இன்னிங்க்ஸில் பிளேயிங் கண்டிசனுக்குஅப்ளை பண்ணி டெக்னிக்கலி சவுண்டா இந்திய டெஸ்ட் பேட்டிங், ரொம்ப நாள் கழிச்சு இன்றுபாக்க கிடைத்தது. ஆரம்பம்முதல் கடைசி வரை ஒரே மனநிலையில்பயணிப்பது கேஎல்.ராகுலின் சிறப்பு என்றால், திடீரென கியரை மாற்றுவதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதும்என பந்துவீச்சாளர்களை குழப்பத்தில் வைத்திருப்பது ஜெய்ஸ்வாலின் சிறப்பு.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

          பும்ரா இழுத்து வந்ததேரை ஏறக்குறைய இந்தியத் தொடக்க வீரர்கள் நிலைக்குப்பக்கத்தில் கொண்டு வந்து விட்டார்கள். யஸஷ்வி ஜெய்ஸ்வால் (193 பந்துகள், 7 ஃபோர், 2 சிக்சர்,90 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (153 பந்துகள், 4 ஃபோர், 62 ரன்) இருவரும் ஒருடெஸ்ட் மேட்சை எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினார்கள். நாளை இரு சதம் அடித்து, அடுத்துகோலி, படிக்கல், பந்த் மூவரும் அரை சதம் அடித்தார்கள் என்றால் இந்திய அணியின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது.

Related articles

Recent articles

spot_img