சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

Published:

railway news - 2026
#image_title

பயணிகள் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக் ப்பட்டுள்ளதாக தென்னக‌ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 20681/20682 தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் வரும் 27.11.24 முதல் 30.01.25 வரை இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்த ரயிலை நிரந்தரமாக தினசரி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img