அம்ரித் பாரத் ரயில்கள்; தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம்!

railway news - 2026
#image_title

அம்ரித் பாரத் ரயில்கள் திருவனந்தபுரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பகுதி வழியே ரயில்கள் செல்லும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக., கைப்பற்றி சாதனை படைதத்து. எனவே பாஜக., தலைவர்கள் தங்கள் பகுதியான திருவனந்தபுரத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில் போக்குவத்தில் பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோல், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜக., இம்முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. இந்த முறை அங்கு பாஜக., அலை வீசுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருந்தாலும், மத்திய பாஜக., அரசு மேற்கு வங்கத்தில் மக்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செய்லபடுத்தியும் வருகிறது.

அசாமில் பாஜக., ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தின் மால்டா நகருக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ரயில் சேவைகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கத்தின் ஹவ்ரா முதல் அசாம் கௌஹாத்தி வரை இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மால்டா ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிவைத்தார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க வழி செய்யும். வழக்கமான பயண நேரத்தை விட இது இரண்டரை மணிநேரம் முன்கூட்டியே சென்றுவிடும்.

3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

தமிழ்நாட்டுக்கும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தையும் மேற்கு வங்கம், அசாம் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் நான்கு அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த நான்கு ரயில் சேவைகளில் மூன்று ரயில்கள் மேற்கு வங்கம் – தமிழ்நாடு இடையே இயக்கப்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் சாண்ட்ரகாச்சி -சென்னை தாம்பரம் (ரயில் எண்: 16107/16108) இடையேயான ரயில், தமிழ்நாட்டின் நாகர்கோவில் – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20603/20604) ரயில், தமிழ்நாட்டின் திருச்சி – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20609/20610) ரயில் என மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி SMVT பெங்களூரு – மேற்கு வங்கத்தின் அலிபூர் துரார் இடையேவும் ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவனிக்க வேண்டியதே, அதில் அனைத்து பெட்டிகளும் சாதாரண பெட்டிகளாகும். அதாவது குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையவே கிடையாது. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும். பொதுபெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இதில் உள்ளன. இதில் 1000 கி.மீ., தூரத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்னும் குறைவான தூரத்திற்கு, குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.

நாகர்கோயிலுக்கு வந்த அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள்!

நாகர்கோவிலில் இருந்து 2 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் துவங்கி வைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலிருந்து இன்று அனுப்பப்பி வைக்க ப்படுவதாக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமித்பாரத் ரேக் 17 நாகர்கோவில் நோக்கி அனுப்பப்படுகிறது // வரும் ஜனவரி 22/23 தேதிகளில் இந்த புதிய வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில் துவங்கி வைக்கப்பட உள்ளது

திருவனந்தபுரம் ஹைதராபாத் ,
திருவனந்தபுரம் தாம்பரம்,
நாகர்கோவில் ஹைதராபாத்,
நாகர்கோவில் மங்களூர்,
கோயம்புத்தூர் தன்பாத்

உள்ளிட்ட ஐந்து வழித்தடங்களில் புதிய அமிர்த பாரதி ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் தாம்பரம் – திருவனந்தபுரம் அல்லது, திருவனந்தபுரம் – ஹைதராபாத் ரயில் கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் இருந்தது. ஆனால், ஒற்றை ரயில்பாதை, மலைப் பாதை, வருவாய் பிரச்னை என பல காரணங்களைச் சொல்லி, வழக்கம்போல் நாகர்கோயில் திருநெல்வேலி பாதையிலேயே இந்த ரயில்கள் திட்டமிடப்பட்டதால், தென்காசி, ராஜபாளையம் பகுதி மக்கள் பெரும் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories