
சபரிமலையில் 18ஆம் தேதி வரை மட்டும் நெய்அபிஷேகம் நடைபெறும் 19.1.26 தங்கககுடத்தில் களபாபிஷேகம் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 19-ம் தேதி வரையே பக் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஜன18வரை நேய் அபிஷேகம் நடைபெறுவதால் இருமுடி கட்டி நெய் கொண்டு செல்லும் பக்தர்கள் அனைவரும் காலைக்குள் சபரிமலையில் இருந்தால் நெய் அபிஷேகம் செய்து வரலாம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு பாரம்பரிய நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, அன்று மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் நாளையுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. வரும் 19-ம் தேதி இரவு குருதி பூஜை நடைபெற உள்ளது.
அன்று இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தள ராஜ வம்சப் பிரதிநிதியின் பிரத்யேக தரிசனத்துக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.




