தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

chandrababunaidu - 2026

புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து  தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்தார். மத்திய அரசில் பாஜக., முன்னர் 90:10 என்ற அளவில் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு அந்தஸ்து என்று உறுதி மொழி அளித்திருந்ததை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில்,  மத்திய அமைச்சரவையில் இருந்து தனது கட்சியின் இரு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்திருந்தார். இந் நிலையில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 உறுப்பினர்களும், மாநிலகளவையில் 6 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img