வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி சேம்பியன் பட்டம் வென்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் ஓரளவு நன்றாக ஆடினர். முதல் மூன்று ஓவரில் வங்கதேசம் 26 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை