தடையை மீறி நடைபெற்ற திருமணம்: சசிகலா புஷ்பா – ராமசாமி திருமணம் தில்லியில் கோலாகலம்!

sasikala pushpa - 2026

குடும்ப நல நீதிமன்றம் விதித்த தடையை மீறி தில்லியில் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடைபெற்றது.

அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் இன்று நடைபெறும் என்று அழைப்பிதழ்களுடன் இணையத்தில் தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின.

sasikala pushpa ramasamy - 2026

இந்நிலையில், இந்தத் திருமணத்துக்கு எதிராக ராமசாமியின் மனைவி சத்யபிரியா என்பவர், மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்ரைத் தொடுத்தார். அந்த மனுவில், ‘தனக்கும் ராமசாமிக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராமசாமிக்கும் எனக்கும் 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்யவுள்ளார். அதைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சத்ய பிரியாவுக்கும் ராமசாமிக்கும் இடையே நடைபெற்ற திருமணம், அங்கீகரிக்கப்பட்ட திருமணம். ராமசாமி, வேறொரு திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீதிமன்றத்தின் முன் சத்யபிரியாவை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறியது. இதனால், ராமசாமி இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கு தடையும் விதித்தது.

இந்நிலையில், இன்று தில்லியில் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், எம்.பி. ஒருவர் தனது திருமணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories