காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

sidharamaiya in mysore chamundi temple - 2026

புது தில்லி: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக தனது தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, தான் தொகுதி மாறுகிறார் அந்த மாநில முதல்வர் சித்தராமையா.

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். இதனால் மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடகாவில், காங்கிரஸ், பாஜக., குமாரசாமியின் ம.ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. பாஜக., தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், 218 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில், மாநில முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா ஆகியோரில் பெயர்களும் உள்ளன. கடந்த 2008ல் இருந்து வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த சித்தராமையா, இந்தத் தேர்தலில் தனது சொந்த தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தான் மைசூரு, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். யதீந்திரா தற்போது வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ளவர்களில் 14 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டு, குடும்ப அரசியல் காங்கிரஸில் வழக்கம் போல் கொடிகட்டிப் பறக்கிறது.

முன்னதாக, சித்தராமையா ஏன் தொகுதி மாறிப் போட்டியிடுகிறார் என்பது குறித்து கருத்து கூறிய பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக., அலையால் சித்தராமையா மிரண்டு போயுள்ளார், அதனால்தான் அவர் தன் சொந்தத் தொகுதியில் இருந்து மாறி, மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டார். கிட்டூர் மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories