மே 30: கோவா தனி மாநிலமாகியது

20 May29 Goa - 2026‘கோ’ (Go) என்றால் போ, ‘வா’ என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா… வா… என்று வரவேற்கிறது கோவா! அப்படி சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்பவர்கள் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர். அவர்களில் 5 லட்சம் பேர் வெளிநாட்டினர்!
இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா. குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியான கொங்கணில் அமைந்துள்ள கோவா, வட திசையில் மகாராஷ்டிரா, கிழக்கில் கர்நாடகா, தெற்கில் அரபிக்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் பேசும் மொழி கொங்கணி.

கலாசாரம்: வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமான மார்கோ, போர்ச்சுகீசியர்களின் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கோவா மக்கள் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். அதனாலேயே இங்கே இருக்கும் கட்டடங்களையும் அடையாளச் சின்னங்களையும் சிறப்பாகப் பராமரித்துவருகிறார்கள்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விழாக்கள்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈஸ்டர், சம்ஸார் பட்வோ, சாம்பல் புதன் மற்றும் களியாட்டம் போன்ற விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன.

அழகிய கடற்கரைகள் 16: வட கோவாவில் ஆரம்போல், மாண்ட்ரெம், மோர்ஜிம், வகாட்டர், அஞ்சுனா, பாகா, காலங்குட், சிங்கரின், மிராமர் ஆகியனவும்; தென் கோவாவில் மஜோர்டா, பெடல்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய ௧6 கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அஞ்சுனா, காலங்குட், மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
பாகா கடற்கரையில் ‘பிரிட்டோஸ்’ என்ற அழகான குடில்கள் அமைந்துள்ளன.
அஞ்சுனா கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமானதுதான். கோவாவின் தெற்கு பகுதிக் கடற்கரைகள் மிக அமைதியானவை. இங்கு, கடற்கரையோரம் அமைந்த அழகான தேவாலயங்கள் பழைமையை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துபவை.

கலை விரும்பிகளின் சொர்க்கம்: காலையில் சுற்றுலாப் பயணிகளால் குதூகலிக்கும் கோவா கடற்கரை, மாலையில் கலை நிகழ்ச்சிகளை விரும்பும் மக்களின் சொர்க்கமாக மாறிவிடுகிறது. பாரம்பரிய இசை, நடனம் என எல்லா நாளும் இங்கே திருவிழாதான்!
இது தவிர, ஆடம்பரப் படகுகளும் கவர்ந்து இழுக்கின்றன. மாலையில் தொடங்கும் படகுப் பயணங்கள், அந்தக்கால கோவா, போர்ச்சுகீசிய மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் சுற்றிக் காட்டுகின்றன.
நம்முடைய விடுமுறை நாட்களைக் கொண்டாட கோவா செல்லலாம். இன்னும் அதிகமாக புதிய அனுபவத்தைப் பெற விரும்பினால், கடற்கரைகளில் ஒரு குடிலை வாடகைக்கு எடுத்துத் தங்கலாம்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories