December 5, 2025, 8:36 PM
26.7 C
Chennai

மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்களின் இன்றியமையாத பங்கு: ராம்நாத் உரை!

president governor meet - 2025

ஆளுநர்களின் 2 நாள் மாநாடு புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு அமர்வுகளாக இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தொடங்கி வைத்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த  மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

நாட்டின் கூட்டுறவு அமைப்பில் ஆளுநர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முக்கியப் பங்காற்றுகின்றனர். மாநிலத்தை வழிநடத்தும் மிகப் பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று 49வது ஆளுநர்கள் துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டில் பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்கள் பங்கு, பல்வேறு மாநிலங்களின் 115 மாதிரி மாவட்டங்களில் வேகமான முன்னேற்றம், மத்திய அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படும் விதம், நாட்டின் 10 கோடி எஸ்.டி., மக்களின் வாழ்க்கைத் தரம், பல்கலை வேந்தர்களாக ஆளுநர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி என பல தலைப்புகளில் உரையாற்ற்றினார் ராம்நாத் கோவிந்த்.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும்.  ஆளுநர்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர்கள் என்ற வகையில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு, சமூக மாற்றத்தில் ஆளுநர்களின் பங்கு ஆகியவை குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான அம்சங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு அமர்வில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories