மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்களின் இன்றியமையாத பங்கு: ராம்நாத் உரை!

Published:

president governor meet - 2026

ஆளுநர்களின் 2 நாள் மாநாடு புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு அமர்வுகளாக இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தொடங்கி வைத்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த  மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

நாட்டின் கூட்டுறவு அமைப்பில் ஆளுநர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முக்கியப் பங்காற்றுகின்றனர். மாநிலத்தை வழிநடத்தும் மிகப் பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று 49வது ஆளுநர்கள் துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டில் பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்கள் பங்கு, பல்வேறு மாநிலங்களின் 115 மாதிரி மாவட்டங்களில் வேகமான முன்னேற்றம், மத்திய அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படும் விதம், நாட்டின் 10 கோடி எஸ்.டி., மக்களின் வாழ்க்கைத் தரம், பல்கலை வேந்தர்களாக ஆளுநர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி என பல தலைப்புகளில் உரையாற்ற்றினார் ராம்நாத் கோவிந்த்.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும்.  ஆளுநர்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர்கள் என்ற வகையில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு, சமூக மாற்றத்தில் ஆளுநர்களின் பங்கு ஆகியவை குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான அம்சங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு அமர்வில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img