ஐடிபிஐ., வங்கியின் 51% பங்குகளை வாங்குகிறது எல்.ஐ.சி.,! ஐஆர்டிஏ ஒப்புதல்!

Published:

lic idbi - 2026

எல்ஐசியின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐடிபிஐ வங்கி. அதன் 51% பங்குகளை எல்ஐசி வாங்க ஐஆர்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் 8% பங்குகளை வைத்துள்ள அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது பங்குகளை அதிகரிக்க விருப்பம் தெரிவித்தது. இந்த வர்த்தக நடவடிக்கைக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை  ஆணையமான ஐஆர்டிஏ., நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன்படி 51% அளவுக்கு எல்ஐசி நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வைத்துக் கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பண பரிவர்த்தனை வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பிறகு ஐடிபிஐ.,யின் பங்குகளை எல்ஐசி வாங்கிக் கொள்ளும்.

தற்போதுள்ள 8% பங்குகளுடன்  மேலும் 43% ஐடிபிஐயின் பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்குத் தொகை 86%ல் இருந்து 44% ஆக குறையும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

51% பங்குகளை வாங்குவதால் எல்ஐசியின் கட்டுப்பாட்டுக்குள் ஐடிபிஐ வங்கி வர உள்ளது. எனினும் நிர்வாகப் பணிகளை எல்ஐசி மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விலகும் முதல் பொதுத் துறை வங்கியாக ஐடிபிஐ இருக்கும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img