December 5, 2025, 8:34 PM
26.7 C
Chennai

சொல்லச் சொல்ல கேட்காமல் பந்தலில் ஏறிய தொண்டர்கள்; விழுந்து காயமடைந்தது கண்டு கண்ணீர் விட்ட மோடி!

modi meeting west bengal2 - 2025மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள் காயமடைந்தனர்.

பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் நுழைவுப் பகுதிக்கு அருகே மக்கள் மழையில் நனையாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மோடியைப் பார்க்கும் ஆர்வத்தில், அதிக அளவு தொண்டர்கள் கம்புகளில் ஏறி அமர்ந்துள்ளனர். அதைக் கண்ட மோடி, தான் பேசிக் கொண்டிருந்த போதே, தொண்டர்கள் பந்தலின் மேல் ஏறி அமர வேண்டாம் என கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், தொண்டர்கள் மோடியைப் பார்த்த ஆர்வத்தில் அதைப் பொருட்படுத்தாமல் பந்தலில் மேலும் மேலும் ஏறி அமர்ந்தனர்.
modi meeting west bengal1 - 2025
அப்போது  திடீரென அந்தப் பந்தல் சரிந்து விழுந்தது. இதை அடுத்து உடனடியாகத் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திய மோடி,  தனது பாதுகாப்பாளரை அழைத்து அங்கே சென்று பார்க்கச் சொன்னார். பிரதமரின் பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு ஓடி வந்து, காயமடைந்தவர்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 22 பேர் வரை காயமடைந்தனர். கூட்டம் முடிந்த பின்னர்,  மருத்துவமனைக்குச் சென்ற மோடி, அங்கே அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்தவர் ஒருவருக்கு ஆறுதல் கூறியவர், அவரின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் விட்டு அழுதார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories