மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க வேண்டுமாம்! எடப்பாடியாரின் ‘ஏழரைத் தன’ முடிவு!

Published:

edappadi panneerselvam - 2026

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்க வேண்டும் என்று அதிமுக., எம்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களுடன் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக., எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.  இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது, எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு இருவரும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

முன்னதாக, இந்த இரண்டு மசோதாக்களையும் நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். யுஜிசி மசோதாவை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img