திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!

thirupathi 1 - 2026

திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30 சாதுக்களும் 300க்கும் மேற்பட்ட இந்து இயக்க தொண்டர்களும் விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி பேரணியாகச் செல்லவுள்ளனர்.

வரும் ஜூலை 29 ஆம் தேதி விஜயவாடா கனகதுர்கா கோவிலில், அம்பிகைக்கு புடைவை சாற்றி காணிக்கை கொடுத்து, தங்கள் கோரிக்கையை ஏற்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அங்கிருந்து திருப்பதி நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் 30 கி.மி., தொலைவுக்கு பாதயாத்திரையாக திட்டமிட்டு, வரும் ஆக.12ஆம் தேதி திருப்பதி சென்றடைகின்றனர். விஜயவாடாவில் இருந்து சுமார் 500 கிராமங்களைக் கடந்து, கிராம மக்களிடம் பேசி, திருப்பதியில் பெரிய பொதுக்கூட்டத்துக்கும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து சைவக்ஷேத்ரம் சிவஸ்வாமி கூறியபோது, இந்த 15 நாள் பேரணியை நாங்கள் முடிப்பதற்குள், அரசு ஒரு குழுவை நியமித்து, திருமலை திருப்பதி பெருமாளின் காணாமல் போன நகைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குழுவில் போர்ட் உறுப்பினர்கள், வேதக் குழு உறுப்பினர்கள், சுவாமிஜிக்கள் நகை மதிப்பீட்டாளர்கள் அறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கியிருக்க வேண்டும். இந்தப் பேரணி நடைபெறும் 15 நாட்களுக்குள் அரசு இந்தக் குழுவை அமைக்காவிட்டால், திருப்பதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பகிரங்கப் படுத்துவோம்… என்றார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

1 COMMENT

  1. களவுபோன நகைகளை அபகரித்தவர்களை சிறை பிடித்து, தண்டனை கொடுத்து, அந்த நகைகளை மீண்டும் ஏழுமலையனிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாரா, வியாக்கியானம் பேசும் சந்திரபாபு நாயுடு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories