டோக்லம் பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது: சுஷ்மா சுவராஜ் பெருமிதம்!

IMG 20180802 224202 - 2026இந்தியா, சீன எல்லையில், டோக்லம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்தியா, சீனா எல்லை பகுதியில், விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. முகாம்கள், சாலைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

IMG 20180802 224956 - 2026கடந்தாண்டு  டோக்லம் பகுதியில் சீனா ராணுவம் சாலை அமைக்கும் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் அங்கு படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு அதிகளவில் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியது.

இதனால் அங்கு போர் பதற்றம் உண்டானது. சுமார் 75 நாட்களாக இந்த சூழல் நீடித்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சீனாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

IMG 20180802 224029 - 2026இந்நிலையில், டோக்லம் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் சாலைப்பணிகளை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவும் இதுபற்றி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து  மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து பேசுகையில், ‘‘டோக்லம் பகுதியில் கடந்தாண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை.

IMG 20180802 223855 - 2026டோக்லம் விவகாரம் ராஜதந்திர நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. இந்தியா, சீனா தலைவர்கள் இடையேயான நல்லுறவு, தூதரக நடவடிக்கைகள் போன்றவற்றால் இது சாத்தியமானது. எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories