டோக்லம் பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது: சுஷ்மா சுவராஜ் பெருமிதம்!

IMG 20180802 224202 - 2026இந்தியா, சீன எல்லையில், டோக்லம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்தியா, சீனா எல்லை பகுதியில், விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. முகாம்கள், சாலைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

IMG 20180802 224956 - 2026கடந்தாண்டு  டோக்லம் பகுதியில் சீனா ராணுவம் சாலை அமைக்கும் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் அங்கு படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு அதிகளவில் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியது.

இதனால் அங்கு போர் பதற்றம் உண்டானது. சுமார் 75 நாட்களாக இந்த சூழல் நீடித்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சீனாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

IMG 20180802 224029 - 2026இந்நிலையில், டோக்லம் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் சாலைப்பணிகளை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவும் இதுபற்றி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து  மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து பேசுகையில், ‘‘டோக்லம் பகுதியில் கடந்தாண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை.

IMG 20180802 223855 - 2026டோக்லம் விவகாரம் ராஜதந்திர நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. இந்தியா, சீனா தலைவர்கள் இடையேயான நல்லுறவு, தூதரக நடவடிக்கைகள் போன்றவற்றால் இது சாத்தியமானது. எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories