டோக்லம் பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது: சுஷ்மா சுவராஜ் பெருமிதம்!

IMG 20180802 224202 - 2026இந்தியா, சீன எல்லையில், டோக்லம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்தியா, சீனா எல்லை பகுதியில், விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. முகாம்கள், சாலைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

IMG 20180802 224956 - 2026கடந்தாண்டு  டோக்லம் பகுதியில் சீனா ராணுவம் சாலை அமைக்கும் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் அங்கு படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு அதிகளவில் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியது.

இதனால் அங்கு போர் பதற்றம் உண்டானது. சுமார் 75 நாட்களாக இந்த சூழல் நீடித்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சீனாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

IMG 20180802 224029 - 2026இந்நிலையில், டோக்லம் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் சாலைப்பணிகளை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவும் இதுபற்றி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து  மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து பேசுகையில், ‘‘டோக்லம் பகுதியில் கடந்தாண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை.

IMG 20180802 223855 - 2026டோக்லம் விவகாரம் ராஜதந்திர நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. இந்தியா, சீனா தலைவர்கள் இடையேயான நல்லுறவு, தூதரக நடவடிக்கைகள் போன்றவற்றால் இது சாத்தியமானது. எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories