ராஜீவ் காந்தி கொண்டுவந்தது தேசிய குடிமக்கள் பதிவேடு; நடைமுறைப் படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸ் கட்சியே!

காங்கிரஸ் காரிய கமிட்டி…

புது தில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தான் வெளிநாட்டினர் அதிகம் நாடுகடத்தப் பட்டனர் என்று கூறியுள்ள அக்கட்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டம் என்று கூறியுள்ளது.

randeep surjeewala - 2026

தில்லியில் சனிக்கிழமை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருப்பதாக பாஜக பட்டியலிட்டு வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பாஜக., மீது ஊழல் புகார்களைத் தெரிவித்து அதன் சாதனைகளை மறைக்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

மோடி தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் நடந்துள்ள ஊழல்கள், மோசடிகள் குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இந்தியாவில் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அவரது பின்னணி குறித்து கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாடு விசாரித்த போது, சோக்ஸியின் மோசடி தொடர்பான தகவலை இந்தியா அளிக்கவில்லை என்று ஆண்டிகுவா அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மெஹுல் சோக்ஸி விவகாரத்தில், மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ, அந்த விமானம் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து முழுதாகத் தெரிவிக்கவில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ., அரசால் அந்த விமானம் ஒன்று ரூ.526 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தேஜகூ., அரசால் அந்த விமானம் ஒன்று ரூ.1,676 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு கருவூலத்துக்கு ரூ.48,000 கோடி நஷ்டம் ஏற்படும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த திட்டம். கடந்த 1985ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் இது. இந்தப் பதிவேட்டில் இந்திய குடிமக்களின் பெயர் விடுபடாமல் இருப்பதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில், 82,728 வெளிநாட்டினர் (வங்கதேசத்தவர்) நாடு கடத்தப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசில் கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 1,822 வெளிநாட்டினரைத் தான் நாடு கடத்தியுள்ளது… என்றார் ரண்தீப்
சுர்ஜேவாலா.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories