பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!

atal bihari vajpayee ji - 2026
Prime Minister Atal Bihari Vajpayee. Express archive photo
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்…
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமை கொள்ளத் தக்க வகையில் இருந்தது.
பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பல வகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார். ஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு  வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.
கார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
பாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories