பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!

atal bihari vajpayee ji - 2026
Prime Minister Atal Bihari Vajpayee. Express archive photo
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்…
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமை கொள்ளத் தக்க வகையில் இருந்தது.
பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பல வகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார். ஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு  வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.
கார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
பாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories