மெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? வாஜ்பாய் Vs இந்திரா

Atal Bihari Vajpayee Indira Gandhi - 2026

இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அது எமர்ஜன்சிக்கு முந்தைய காலகட்டம். இதைக் கண்டித்து மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள். வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடந்து வந்து எதிர்ப்பைக் காட்டினர்.

அடல்ஜி ஒரு மாட்டு வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்ற சாலையில் மெல்லச் செல்லும் வண்டிகளுக்கு (slow moving vehicles) அனுமதி இல்லை என்று சாலை தொடக்கத்திலேயே காவலர்கள் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். நடந்து பாராளுமன்றத்தின் உள்ளே போனார் அடல்ஜி.

பெட்ரோல் செலவைக் குறைக்க என்று சொல்லி பிரதமர் இந்திராகாந்தி 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்றத்தின் வாசலில் அவர் இறங்கியதும் சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினர் காவலர்.

உள்ளே கேள்வி நேரம் முடிந்ததும் தன் வண்டி பறிமுதல் செய்யப்பட்ட பிரச்சினையை எழுப்பினார் அடல்ஜி. “அது மெல்லச் செல்லும் வண்டி, ஆகவே காவலர் பிடிக்கத்தான் செய்வார்கள். இத்தனை நாள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இது தெரியாதா?” என்று ஏளனமாகக் கேட்டார் இந்திராகாந்தி.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

“மாட்டு வண்டி மெல்லப்போகும் என்பது ஓட்டி வந்த எனக்கே தெரியும். வண்டிக்காரர் ஓட்ட பிரதமர் உட்கார்ந்து வந்த குதிரை வண்டி எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் போகும்?” என்றார் அடல்ஜி.

பதில் இல்லை. சபாநாயகரிடம் சொன்னார் “குதிரை வண்டி மெல்லச் செல்லும் வண்டியா இல்லையா என்று ஆராய்ந்து சீக்கிரம் சொல்லுங்கள். தாமதமானால் நான் உரிமைப் பிரச்சனைக்கு நோட்டீஸ் கொடுப்பேன்.”

“எதற்கு உரிமைப் பிரச்சனை?” என்றார் சபாநாயகர்.

“மெல்லச் செல்லும் வண்டியில் பாராளுமன்றத்துக்கு வர பிரதமருக்கு மட்டும் உரிமை உள்ளதா அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளதா என்று விவாதிப்போம்” என்றார்.

மொரார்ஜி உள்ளிட்ட தலைவர்களின் சற்றே காரசாரமான பேச்சுக்களுக்குப் பிறகு அவை மதிய உணவுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. உணவு முடித்து வெளியே வந்தார் அடல்ஜி. வாசலுக்கு அருகே பார்க்கிங் இடத்தில் அவரது மாட்டு வண்டி. காளைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. கிராமத்தானான ஒரு போலீஸ்காரர் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

என்னவென்று கேட்டால் மெல்லச் செல்லும் வண்டி சம்பந்தப்பட்ட உத்தரவு அப்போதைக்குத் தளர்த்தப்பட்டது என்றார் தில்லி போலீஸ் கமிஷனர். ஆனால் பாதுகாப்பு கருதி மெல்லச் செல்லும் வண்டியில் வரவேண்டாம் என்றார். “பிரதமர் மட்டும் வரலாமா அவருக்கு என்ன நிரந்தர விதிவிலக்கா” என்று கேட்டார் அடல்ஜி.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

“இல்லை ஐயா! நாளை வரும்போதே காரில் வருவதாக பிரதமர் சொல்லிவிட்டார்.” என்றார் கமிஷனர்.

ஹே ஹேய் என்று வண்டியை ஓட்டிக் கொண்டு அன்று மாலை வீடு போனார் அடல்ஜி. மறுநாள் பாராளுமன்றத்துக்கு வந்தபோது பேருந்தில் வந்து இறங்கினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories