December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

மெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? வாஜ்பாய் Vs இந்திரா

Atal Bihari Vajpayee Indira Gandhi - 2025

இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அது எமர்ஜன்சிக்கு முந்தைய காலகட்டம். இதைக் கண்டித்து மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள். வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடந்து வந்து எதிர்ப்பைக் காட்டினர்.

அடல்ஜி ஒரு மாட்டு வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்ற சாலையில் மெல்லச் செல்லும் வண்டிகளுக்கு (slow moving vehicles) அனுமதி இல்லை என்று சாலை தொடக்கத்திலேயே காவலர்கள் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். நடந்து பாராளுமன்றத்தின் உள்ளே போனார் அடல்ஜி.

பெட்ரோல் செலவைக் குறைக்க என்று சொல்லி பிரதமர் இந்திராகாந்தி 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்றத்தின் வாசலில் அவர் இறங்கியதும் சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினர் காவலர்.

உள்ளே கேள்வி நேரம் முடிந்ததும் தன் வண்டி பறிமுதல் செய்யப்பட்ட பிரச்சினையை எழுப்பினார் அடல்ஜி. “அது மெல்லச் செல்லும் வண்டி, ஆகவே காவலர் பிடிக்கத்தான் செய்வார்கள். இத்தனை நாள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இது தெரியாதா?” என்று ஏளனமாகக் கேட்டார் இந்திராகாந்தி.

“மாட்டு வண்டி மெல்லப்போகும் என்பது ஓட்டி வந்த எனக்கே தெரியும். வண்டிக்காரர் ஓட்ட பிரதமர் உட்கார்ந்து வந்த குதிரை வண்டி எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் போகும்?” என்றார் அடல்ஜி.

பதில் இல்லை. சபாநாயகரிடம் சொன்னார் “குதிரை வண்டி மெல்லச் செல்லும் வண்டியா இல்லையா என்று ஆராய்ந்து சீக்கிரம் சொல்லுங்கள். தாமதமானால் நான் உரிமைப் பிரச்சனைக்கு நோட்டீஸ் கொடுப்பேன்.”

“எதற்கு உரிமைப் பிரச்சனை?” என்றார் சபாநாயகர்.

“மெல்லச் செல்லும் வண்டியில் பாராளுமன்றத்துக்கு வர பிரதமருக்கு மட்டும் உரிமை உள்ளதா அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளதா என்று விவாதிப்போம்” என்றார்.

மொரார்ஜி உள்ளிட்ட தலைவர்களின் சற்றே காரசாரமான பேச்சுக்களுக்குப் பிறகு அவை மதிய உணவுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. உணவு முடித்து வெளியே வந்தார் அடல்ஜி. வாசலுக்கு அருகே பார்க்கிங் இடத்தில் அவரது மாட்டு வண்டி. காளைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. கிராமத்தானான ஒரு போலீஸ்காரர் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

என்னவென்று கேட்டால் மெல்லச் செல்லும் வண்டி சம்பந்தப்பட்ட உத்தரவு அப்போதைக்குத் தளர்த்தப்பட்டது என்றார் தில்லி போலீஸ் கமிஷனர். ஆனால் பாதுகாப்பு கருதி மெல்லச் செல்லும் வண்டியில் வரவேண்டாம் என்றார். “பிரதமர் மட்டும் வரலாமா அவருக்கு என்ன நிரந்தர விதிவிலக்கா” என்று கேட்டார் அடல்ஜி.

“இல்லை ஐயா! நாளை வரும்போதே காரில் வருவதாக பிரதமர் சொல்லிவிட்டார்.” என்றார் கமிஷனர்.

ஹே ஹேய் என்று வண்டியை ஓட்டிக் கொண்டு அன்று மாலை வீடு போனார் அடல்ஜி. மறுநாள் பாராளுமன்றத்துக்கு வந்தபோது பேருந்தில் வந்து இறங்கினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories