நிவாரணப் பொருள்களைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டும் மார்க்சிஸ்ட்: காறித் துப்பும் இந்திய கம்யூ.,!

kerala stickers1 - 2026

ஸ்டிக்கர் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று தமிழகத்தை, குறிப்பாக அ.தி.மு.க.வினர் குறித்து கேலி பேசிய கேரளத்தவர்கள் இப்போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் வெள்ள நிவாரண ஸ்டிக்கர் அரசியலைக் கண்டு காறித் துப்புகிறார்கள். அதுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக மார்க்சிஸ்ட் மீது திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது. இதனால் கேரள அரசியல் சந்தி சிரிக்கிறது.

DlWfM7vUYAAF1UE - 2026

கேரளாவில் ஆளும் இடது முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக குடுமிப்பிடி சண்டை உருவாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள வெள்ள நிவாரண பொருட்களைத் திருடி, மூணாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

kerala stickers - 2026

இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணத்திற்காக வந்த பொருட்கள் அனைத்தும் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்திரை பதித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளுடன் வாகனங்களில் எடுத்துச் சென்று விநியோகிக்கப் படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

மூணாறு மாவட்ட ஆட்சியருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தன்னார்வலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் அனுப்பப்பட்டு வரும் நிவாரணப் பொருட்கள் நேரடியாக மூணாறு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, துயரடையும் மக்களை சென்றடையாமலேயே முடங்கிக் கிடப்பதாக குற்றம் சாட்டுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

பலதரப்பட்ட மக்கள் தங்கள் அதிருப்தியையும் புகாரையும் ஆட்சியர் அலுவலகத்தில் சொல்லி கண்ணீர் சிந்துகின்றனர். இதனால், கடுப்பான இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து கண்டித்தாராம்.

கடந்த சனிக்கிழமை (ஆக.25) அன்று தமிழகத்தில் இருந்து சென்ற நிவாரணப் பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்து தங்கள் கட்சி அலுவலகங்களுக்கு கடத்த முன்றனர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அதை தடுத்து நிவாரண பொருட்கள் மக்களை சென்றடைய வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இப்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளேயே அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள குடுமிப் பிடிச் சண்டையால், கேரள அரசியல் கலகலத்துக் காணப்படுகிறது. ஆனால் இதை மறைக்க, ரூ.700 கோடி மேட்டரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் பிணரயி விஜயன்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories