நிவாரணப் பொருள்களைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டும் மார்க்சிஸ்ட்: காறித் துப்பும் இந்திய கம்யூ.,!

kerala stickers1 - 2026

ஸ்டிக்கர் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று தமிழகத்தை, குறிப்பாக அ.தி.மு.க.வினர் குறித்து கேலி பேசிய கேரளத்தவர்கள் இப்போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் வெள்ள நிவாரண ஸ்டிக்கர் அரசியலைக் கண்டு காறித் துப்புகிறார்கள். அதுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக மார்க்சிஸ்ட் மீது திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது. இதனால் கேரள அரசியல் சந்தி சிரிக்கிறது.

DlWfM7vUYAAF1UE - 2026

கேரளாவில் ஆளும் இடது முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக குடுமிப்பிடி சண்டை உருவாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள வெள்ள நிவாரண பொருட்களைத் திருடி, மூணாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

kerala stickers - 2026

இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணத்திற்காக வந்த பொருட்கள் அனைத்தும் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்திரை பதித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளுடன் வாகனங்களில் எடுத்துச் சென்று விநியோகிக்கப் படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மூணாறு மாவட்ட ஆட்சியருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தன்னார்வலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் அனுப்பப்பட்டு வரும் நிவாரணப் பொருட்கள் நேரடியாக மூணாறு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, துயரடையும் மக்களை சென்றடையாமலேயே முடங்கிக் கிடப்பதாக குற்றம் சாட்டுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

பலதரப்பட்ட மக்கள் தங்கள் அதிருப்தியையும் புகாரையும் ஆட்சியர் அலுவலகத்தில் சொல்லி கண்ணீர் சிந்துகின்றனர். இதனால், கடுப்பான இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து கண்டித்தாராம்.

கடந்த சனிக்கிழமை (ஆக.25) அன்று தமிழகத்தில் இருந்து சென்ற நிவாரணப் பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்து தங்கள் கட்சி அலுவலகங்களுக்கு கடத்த முன்றனர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அதை தடுத்து நிவாரண பொருட்கள் மக்களை சென்றடைய வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இப்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளேயே அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள குடுமிப் பிடிச் சண்டையால், கேரள அரசியல் கலகலத்துக் காணப்படுகிறது. ஆனால் இதை மறைக்க, ரூ.700 கோடி மேட்டரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் பிணரயி விஜயன்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories