ம.பி.யின் சைபி மசூதியில் பிரதமர் மோடி பேச்சு!

Published:

modi saifi mosque - 2026

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபலமான சைஃபீ மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது உரையை அங்கே நிகழ்த்தினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது சைஃபீ மசூதி. இங்கே இமாம் ஹுசைன் உயிர்த் தியாகத்தை சிறப்பிக்கும் ஆஷுரா முபாரகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப் பட்டிருந்தார். அதன்படி மசூதிக்குச் சென்ற மோடியை ஷியா பிரிவைச் சேர்ந்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி மதப் பிரிவுத் தலைவர் சையத்னா முஃபாதல் சைஃபுதீன், மோடி நீடூழி வாழப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

அதன் பின்னர் அங்கே கூடியிருந்தவர்கள் தங்கள் வழக்கப்படி இறை துதி பாடல் பாடினர். தொடர்ந்து மோடி அங்கே தனது  உரையை நிகழ்த்தினார்.

 

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img