பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது!

nirmala - 2026

புது தில்லி: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்லப் போவதாக வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிய 2 பேர் உத்தராகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தராகண்ட் மாநிலம் தர்சுலா நகரில் திங்கள்கிழமை நேற்று ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. இதனை தொடங்கி வைக்க வந்திருந்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நபர் வாட்ஸ்அப் குழுவில் தாம் நிர்மலா சீதாராமனை சுட்டுக் கொல்லப் போவதாகவும், நாளையே அவருக்கு கடைசி நாள் என்றும் ஒரு செய்தியை பதிந்தார். அதற்கு அந்தக் குழுவில் ஒரு நபர் பதில் அளித்துள்ளார்.

இந்த உரையாடல் உளவுத்துறை கவனத்துக்குச் சென்று, அவர்கள் மூலம் தர்சுலா நகர் போலீஸார் வசம் சென்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்த காவலர்கள் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவு 506 மற்றும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி, அவர்களிடம் ஏதேனும் வெடிபொருள்கள் உள்ளனவா போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. அவர்கள் இருவரும் போதை தலைக்கேறி இவ்வாறு செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories