ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இரு தினங்களுக்கு முன்னர் ராஞ்சி தெருக்களில் தனது பைக்கை ஓட்டி மகிழ்ந்தார். ஆனால், அவர் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டினார் என்று ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். தனது சொந்த ஊரான ராஞ்சியில் தோனி திங்கட்கிழமை அன்று பாதுகாவலர்கள் இன்றி தான் மிகவும் விரும்பும் புல்லட் பைக்கில், தனியாக சுமார் 3 மணி நேரம் சுற்றி வந்தார். இந்நிலையில் அவரது வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததைப் பார்த்த போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதற்குரிய சலானை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இரு சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் தோனியின் பைக்கில் முன்புறத்தில் ஓர் ஓரமாக பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. பதிவு செய்யப்படாத நம்பர்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்வோரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, தோனியும் மாட்டியுள்ளார். இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், நாங்கள் தோனியின் வீட்டுக்கு அபராத சலான் அனுப்பி வைத்தோம். அவரது குடும்பத்தார் அபராதத் தொகையை செலுத்திவிட்டனர். அவர் தெரியாமல் விதிகளை மீறிவிட்டார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்றனர்.
நம்பர் ப்ளேட் இல்லாமல் பைக் ஓட்டிய தோனிக்கு ரூ.500 அபராதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari