ராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா!

Published:

modi amitsha - 2026

புது தில்லி: ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை கண்மூடித் தனமாகக் குறை கூறி வரும் ராகுல், பாகிஸ்தானின் குரலை பேசி வருகிறார். பாகிஸ்தானுடன் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா.

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தொடங்கப் பட்டது. அப்போதே ரிலையன்ஸ் இந்த ஒப்பந்தத்தில் இழுக்கப் பட்டு விட்டது. இதனை கடந்த 2013 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகி தகவல் தெரிவித்தன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

பாஜக., வும் ஆளும் அரசும் ராகுல் குற்றச்சாட்டுக்கான விளக்கங்களையும் ஆதாரங்களையும் அளித்து வருகின்றன. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ராகுல் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி வருகிறார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்நிலையில் பாஜக, தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் குரல் எழுப்புகிறார். பாகிஸ்தானும் இதனையே கூறி வருகிறது. மோடிக்கு எதிரான ராகுலின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் ராகுல் சர்வதேச மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img