‘ரத யாத்திரை நாயகர்’ எல்.கே. அத்வானிக்கு இன்று 91 வயது: பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து!

Published:

modi advani1 - 2026

ரத யாத்திரை நாயகர், பாஜக.,வின் மூத்த தலைவர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி இன்று தனது 91ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வணங்கினார். அத்வானிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது அறிவாற்றல் அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது. இந்திய அரசியலில் அவரது தாக்கம் மகத்தானது. தன்னலம் கருதாமல் விடா முயற்சியுடன் கட்சியை கட்டமைத்து தொண்டர்களை சிறப்பாக வழிநடத்தியவர். அவரது ஆளுமை இந்திய அரசியலில் மகத்தானது. தன்னலமற்ற அவரது சேவையால் பாஜக.,வுக்கு மிகச் சிறந்த கார்யகர்த்தர்கள் கிடைத்துள்ளனர்’ என பாராட்டியுள்ளார்.

modi advani2 - 2026

பின்னர் இன்று மதியம் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வணக்கம் தெரிவித்து, வாழ்த்தினார். தொடர்ந்து இல்லத்தில் மற்றவர்களுடன் உரையாடினார்.

91ஆவது பிறந்த நாள் காணும் பாரதத்தின் மூத்த அரசியல் தலைவர் எல்.கே.அத்வானிக்கு, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மம்தா பானர்ஜி, சித்தராமையா, அசோக் கெலாட், ராஜ்யவர்தன் சிங் ரதோர், சுரேஷ் பிரபு, ராஜீவ் பிரதாப் ரூடி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img