December 5, 2025, 6:45 PM
26.7 C
Chennai

மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்! மோடி இரங்கல்! கர்நாடகாவில் 3 நாள் துக்கம்!

ananth kumar - 2025

பெங்களுரூ: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த அனந்த குமார் இன்று அதிகாலை காலமானார். புற்று நோய்க்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அனந்தகுமார் காலமானதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996, 1998, 1999, 2004, 2009, 2014 என 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெறற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோடி தனது டிவிட்டர் பதிவுகளில், அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளதாகவும், தனது மதிப்பு மிக்க ஒரு சகாவை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்த அனந்தகுமார், குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக உயர்ந்தார். பாஜக.,வுக்கு மதிப்புள்ள ஒரு சொத்தாகத் திகழ்ந்த அனந்தகுமார், சிறந்த நிர்வாகி, தனது துறையை திறம்பட கையாண்டவர், கர்நாடகத்தில் கட்சியை வலுப்படுத்தியவர், குறிப்பாக பெங்களூர் மற்றும் சுற்றுப் பகுதியில் கட்சியை வலுப்படுத்தி எப்போதும் தனது தொகுதிகளில் வலம் வந்தவர் என்று கூறியுள்ளார்.

மேலும், அனந்தகுமாரின் மனைவி டாக்டர் தேஜஸ்வினியிடம் தாம் பேசியதாகவும், அவரிடம் தமது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

அனந்தகுமார் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த இரங்கலில், பெங்களூரு வளர்ச்சியை தனது உயிர் மூச்சாக கருதி பணியாற்றியவர் அனந்த குமார் என தெரிவித்துள்ளார்

கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கௌட தனது இரங்கல் செய்தியில், நண்பர் அனந்தகுமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள், பாஜக., தலைவர்கள் என பலரும் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories