மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்! மோடி இரங்கல்! கர்நாடகாவில் 3 நாள் துக்கம்!

ananth kumar - 2026

பெங்களுரூ: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த அனந்த குமார் இன்று அதிகாலை காலமானார். புற்று நோய்க்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அனந்தகுமார் காலமானதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996, 1998, 1999, 2004, 2009, 2014 என 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெறற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோடி தனது டிவிட்டர் பதிவுகளில், அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளதாகவும், தனது மதிப்பு மிக்க ஒரு சகாவை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்த அனந்தகுமார், குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக உயர்ந்தார். பாஜக.,வுக்கு மதிப்புள்ள ஒரு சொத்தாகத் திகழ்ந்த அனந்தகுமார், சிறந்த நிர்வாகி, தனது துறையை திறம்பட கையாண்டவர், கர்நாடகத்தில் கட்சியை வலுப்படுத்தியவர், குறிப்பாக பெங்களூர் மற்றும் சுற்றுப் பகுதியில் கட்சியை வலுப்படுத்தி எப்போதும் தனது தொகுதிகளில் வலம் வந்தவர் என்று கூறியுள்ளார்.

மேலும், அனந்தகுமாரின் மனைவி டாக்டர் தேஜஸ்வினியிடம் தாம் பேசியதாகவும், அவரிடம் தமது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

அனந்தகுமார் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த இரங்கலில், பெங்களூரு வளர்ச்சியை தனது உயிர் மூச்சாக கருதி பணியாற்றியவர் அனந்த குமார் என தெரிவித்துள்ளார்

கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கௌட தனது இரங்கல் செய்தியில், நண்பர் அனந்தகுமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள், பாஜக., தலைவர்கள் என பலரும் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories