ஓட்டுப்பதிவு நாளில் நாளிதழ்களில் முழுப் பக்க முகப்பு விளம்பரம்! டிஆர்எஸ் கட்சி விதிமீறல்!

Published:

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.
தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.

இன்று தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிமுறை மீறல் என்ற நிலையில், தெலங்கானா தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.
தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.

தெலங்கானாவில், மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளில், 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,821 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பாஜக., 118 இடங்களில் போட்டியிடுகிறது. தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img