சபரிமலை பூஜை உரிமை! புது பிரச்னையை கிளப்பிய கேரள முதல்வர் பிணராயி விஜயன்!

sabarimala pinarayi vijayan - 2026

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் இப்பொழுது புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்

சபரிமலையில் நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் நுழைந்த விவகாரத்தில் சபரிமலை மரபுகளும் பாரம்பரியமும், புனிதத் தன்மையும் மீறப் பட்டதாகக் கூறி, சபரிமலை தலைமை தந்திரி உடனடியாக கோயில் நடையை அடைத்து பரிகார பூஜைகளை மேற்கொண்டார்

இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர் நடந்ததாக புகார்கள் கூறப் பட்டன! கேரளத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பினர். பாலின சமத்துவத்தை முன்னிறுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சபரிமலை தலைமை தந்திரி செயல்பட்டதாக அவர்கள் கூறினர்

பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அவ்வாறு வந்த பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் சபரிமலை சந்நிதியை தந்திரி அடைத்ததாக புகார்கள் எழுப்பப்பட்டன

இதை முன்னிறுத்தி கேரள முதல்வர் பிணராயி விஜயன் ஒரு கருத்தை தெரிவித்தார்! தலைமை தந்திரி அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் ஏன் அவர் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மேலும் அவர் கூறியுள்ள இன்னொரு கருத்து, பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது! இது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பை சேர்ந்த கோவில். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலையில் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது திறக்க வேண்டும், மூட வேண்டும் என்பதை முடிவு செய்யும்! அதனை தந்திரி முடிவு செய்யக்கூடாது என்று பிணராயி விஜயன் கூறி இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததால் கோயிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய நிலையில், அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories