March 19, 2025, 2:44 AM
28.5 C
Chennai

சபரிமலை பூஜை உரிமை! புது பிரச்னையை கிளப்பிய கேரள முதல்வர் பிணராயி விஜயன்!

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் இப்பொழுது புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்

சபரிமலையில் நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் நுழைந்த விவகாரத்தில் சபரிமலை மரபுகளும் பாரம்பரியமும், புனிதத் தன்மையும் மீறப் பட்டதாகக் கூறி, சபரிமலை தலைமை தந்திரி உடனடியாக கோயில் நடையை அடைத்து பரிகார பூஜைகளை மேற்கொண்டார்

இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர் நடந்ததாக புகார்கள் கூறப் பட்டன! கேரளத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பினர். பாலின சமத்துவத்தை முன்னிறுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சபரிமலை தலைமை தந்திரி செயல்பட்டதாக அவர்கள் கூறினர்

பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அவ்வாறு வந்த பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் சபரிமலை சந்நிதியை தந்திரி அடைத்ததாக புகார்கள் எழுப்பப்பட்டன

இதை முன்னிறுத்தி கேரள முதல்வர் பிணராயி விஜயன் ஒரு கருத்தை தெரிவித்தார்! தலைமை தந்திரி அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் ஏன் அவர் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் அவர் கூறியுள்ள இன்னொரு கருத்து, பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது! இது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பை சேர்ந்த கோவில். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலையில் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது திறக்க வேண்டும், மூட வேண்டும் என்பதை முடிவு செய்யும்! அதனை தந்திரி முடிவு செய்யக்கூடாது என்று பிணராயி விஜயன் கூறி இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததால் கோயிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய நிலையில், அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது..

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Topics

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories