February 19, 2026, 8:23 PM
26.7 C
Chennai

சபரிமலை பூஜை உரிமை! புது பிரச்னையை கிளப்பிய கேரள முதல்வர் பிணராயி விஜயன்!

sabarimala pinarayi vijayan - 2026

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் இப்பொழுது புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்

சபரிமலையில் நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் நுழைந்த விவகாரத்தில் சபரிமலை மரபுகளும் பாரம்பரியமும், புனிதத் தன்மையும் மீறப் பட்டதாகக் கூறி, சபரிமலை தலைமை தந்திரி உடனடியாக கோயில் நடையை அடைத்து பரிகார பூஜைகளை மேற்கொண்டார்

இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர் நடந்ததாக புகார்கள் கூறப் பட்டன! கேரளத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பினர். பாலின சமத்துவத்தை முன்னிறுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சபரிமலை தலைமை தந்திரி செயல்பட்டதாக அவர்கள் கூறினர்

பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அவ்வாறு வந்த பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் சபரிமலை சந்நிதியை தந்திரி அடைத்ததாக புகார்கள் எழுப்பப்பட்டன

இதை முன்னிறுத்தி கேரள முதல்வர் பிணராயி விஜயன் ஒரு கருத்தை தெரிவித்தார்! தலைமை தந்திரி அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் ஏன் அவர் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் அவர் கூறியுள்ள இன்னொரு கருத்து, பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது! இது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பை சேர்ந்த கோவில். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலையில் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது திறக்க வேண்டும், மூட வேண்டும் என்பதை முடிவு செய்யும்! அதனை தந்திரி முடிவு செய்யக்கூடாது என்று பிணராயி விஜயன் கூறி இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததால் கோயிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய நிலையில், அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories