December 5, 2025, 8:15 PM
26.7 C
Chennai

கோதாவரி – காவேரி இணைப்பு! தேசிய நீர்த்தட இணைப்பு: மோடி அமைச்சரவைக்கு பாராட்டு!

nitin gadkari2 - 2025

தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு, அமல்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, கோதாவரி நதியின் 1100 டிஎம்சி நீர் கடலுக்குள் வீணாவதைத் தடுப்பதும், அதனை தேவையான வழிகளில் பயன்படுத்திக் கொள்வதும்தான்!

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரும் பாஜக., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பாஜக., நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியவை…: தென் மாநிலங்களின் நீர்த் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து 1,100 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளையும் இணைப்பதால் கோதாவரி ஆற்று நீரை நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும்.

interlinking Copy - 2025

இதற்காக, கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நிதியை உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திரட்டுவோம்.

கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தண்ணீர் தொடர்பாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் நிலவும் நெடுன்காலப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம்.

Godavari - 2025

கோதாவரி – காவிரி ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைக்கும் போது நீர் ஆவியாகி நீர் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே, தனித்துவமான தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட குறைந்த தடிமன் கொண்ட ஸ்டீல் பைப்களை பயன்படுத்தவுள்ளோம். இதனால் திட்ட செலவும் கணிசமாகக் குறையும்

போலாவரம் திட்டத்துக்கு மத்திய நிதி 100 சதவீதம் அளிக்கப் பட்டுள்ளது. போலாவரம் திட்டத்துக்காக மத்திய அரசு முழு அக்கறை செலுத்தி, 100 சதவீத மத்திய நிதிப் பங்களிப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடு இதற்காக பிரதமர் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ எந்த வித பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கவில்லை என்றார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories