கோதாவரி – காவேரி இணைப்பு! தேசிய நீர்த்தட இணைப்பு: மோடி அமைச்சரவைக்கு பாராட்டு!

nitin gadkari2 - 2026

தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு, அமல்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, கோதாவரி நதியின் 1100 டிஎம்சி நீர் கடலுக்குள் வீணாவதைத் தடுப்பதும், அதனை தேவையான வழிகளில் பயன்படுத்திக் கொள்வதும்தான்!

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரும் பாஜக., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பாஜக., நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியவை…: தென் மாநிலங்களின் நீர்த் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து 1,100 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளையும் இணைப்பதால் கோதாவரி ஆற்று நீரை நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும்.

interlinking Copy - 2026

இதற்காக, கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நிதியை உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திரட்டுவோம்.

கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தண்ணீர் தொடர்பாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் நிலவும் நெடுன்காலப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம்.

Godavari - 2026

கோதாவரி – காவிரி ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைக்கும் போது நீர் ஆவியாகி நீர் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே, தனித்துவமான தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட குறைந்த தடிமன் கொண்ட ஸ்டீல் பைப்களை பயன்படுத்தவுள்ளோம். இதனால் திட்ட செலவும் கணிசமாகக் குறையும்

போலாவரம் திட்டத்துக்கு மத்திய நிதி 100 சதவீதம் அளிக்கப் பட்டுள்ளது. போலாவரம் திட்டத்துக்காக மத்திய அரசு முழு அக்கறை செலுத்தி, 100 சதவீத மத்திய நிதிப் பங்களிப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடு இதற்காக பிரதமர் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ எந்த வித பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கவில்லை என்றார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories