இறுதியில் வெல்லப் போவது யார்? இஸ்லாமிய ஆண்களா? இஸ்லாமிய பெண்களா?

07 Aug09 Triple talak - 2026

ராகுலைத் தொடர்ந்து காங்கிரஸ் பெண் எம்பி.. ஒருவரும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் சட்டத்தை ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில்

வெற்றிபெற்று நாங்கள் ஆட்சியில் அமர்ந்ததும், இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராக உள்ள முத்தலாக் சட்டத்தை தூக்கி எறிவோம் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பெண் எம்பி., சுஷ்மிதா தேவ்.

இவர், மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், அசாம் மாநிலம் சிலிகர் தொகுதி எம்.பி.,யாகவும் உள்ளவர். தில்லியில் சிறுபான்மை சமூகத்தவருடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மிதா தேவ், நீங்கள் வாக்கு அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையாக முத்தலாக் சட்டம் நீக்கப்படும் என்று கூறினார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டத்தை குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக கட்சி அலுவலகத்திற்கு கோடிக்கணக்கான கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்களும் கூட கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் கொண்டு வரப்படாது என உறுதி அளிக்கிறோம் என்று பேசினார்.

sushmita dev - 2026

மேலும், இந்த சட்டமானது மோடி அரசால் இஸ்லாமிய ஆண்களை சித்திரவதை செய்வதும் சிறைக்குள் தருவதுமான ஓர் ஐடியா தான் என்று கூறியுள்ளார்! என்னிடம் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள் இது இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பையும் அவர்களது பொருளாதார வளம் வாழ்க்கைக்கான எதிர்கால தேவையை நிறைவு செய்வதாகவும் என்று! ஆனால் நாங்கள் இதனை எதிர்க்கிறோம்! ஏனென்றால் பாஜக இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராகவும் போலீசார் மூலம் அவர்களை துன்புறுத்துவதற்கு மான ஏற்பாடாகவே இந்த சட்டத்தை வைத்து இருக்கிறது என்றார் அவர்.

இஸ்லாமியர்கள் உடனான தனது சந்திப்பின்போது ராகுல் காந்தி ஒரு உறுதிமொழியை அவர்களுக்கு அளித்திருக்கிறார். அதன்படி தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முத்தலாக் தலையை முழுவதுமாக நீக்குவோம் என்று கூறியிருக்கிறார்

ராகுல் காந்தியின் இதே கருத்தை காங்கிரசின் மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் தில்லியில் நடைபெற்ற சிறுபான்மையினர் கூட்டத்தில் கூறியிருக்கிறார்! பாஜக அரசு கொண்டுவர உள்ள முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களை காப்பாற்றுவதற்கு பதிலாக ஆண்களை தண்டிக்கும் வகையில் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ஆனால், முத்தலாக் தடைச்சட்டத்துக்கு இஸ்லாமிய பெண்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்காக நன்றி சொல்லி பேரணிகளையும் நடத்தியுள்ளனர். அதே நேரம், ஆண்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆண்களின் குரலை செவிமடுத்து அவர்களுக்காக முத்தலாக் சட்டத்தை நீக்குவோம் என்று உறுதி கொடுத்திருக்கிறது. அதே நேரம், தங்கள் வாழ்க்கைக்கு சட்ட பாதுகாப்பை அளித்துள்ள ‘மோடி’க்கு ஆதரவு கொடுப்போம் என்று இஸ்லாமியப் பெண்கள் கூறுகின்றனர். எனவே இந்தத் தேர்தல் முத்தலாக்கை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்களுக்கும் பெண்களுக்குமான கருத்து மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. வெற்றி பெறுபவர்களைப் பொறுத்து, இஸ்லாமிய ஆண்களின் கை ஓங்கியிருக்கிறதா? அல்லது பெண்களின் கருத்து ஓங்கியிருக்கிறதா என்பது தெரியும்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories