கோல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று சிபிஐ நடத்துகிறது விசாரணை!

mamata rajeev kumar - 2026

ஷில்லாங்: கோல்கத்தா நகர் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.,! இதற்காக சிபிஐ., அதிகாரிகள் ஷில்லாங் வந்துள்ளனர்.

மேற்குவங்கத்தை புரட்டிப் போட்ட சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது சிபிஐ.,! இந்த சிட்பண்ட் மோசடி விவகாரத்தில், ஆளும் கட்சிக்கு பாதகமான பல ஆதாரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அவற்றை அழித்து விட்டார் ராஜீவ் குமார் என்று சிபிஐ., குற்றம் சாட்டுகிறது.

ராஜீவ் குமார், இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப் பட்ட சிறப்புக் குழுவின் தலைவராக விசாரணை மேற்கொண்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரிடம் நேரில் தாங்களே போய் விசாரிக்க அவர் அலுவலகம் சென்றனர் சிபிஐ அதிகார்கள்.

அப்போது கோல்கத்தா போலீசாரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு முதல்வர் மம்தாவின் உத்தரவே காரணம் என்று கூறப் படுகிறது.

இதனால் சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வைத்து இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்று தீர்மானித்த உச்ச நிதிமன்றம், இரு தரப்புக்கும் பொதுவான இடமாக ஷில்லாங்கை தேர்வு செய்து அங்கேயே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறியது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி,சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர். இதற்காக தில்லியிலிருந்து மேகாலாயா மாநில தலைநகர் ஷில்லாங் வந்துள்ளனர்.

ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அவரிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகள் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kolkata Police Commissioner Rajeev Kumar will be questioned in Shillong by the CBI today over his alleged role in destroying evidence related to the Saradha chit fund scam. The Supreme Court had fixed the Meghalaya capital as the venue for his interrogation, saying that its “neutral” status will prevent unnecessary controversy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories