கோல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று சிபிஐ நடத்துகிறது விசாரணை!

mamata rajeev kumar - 2026

ஷில்லாங்: கோல்கத்தா நகர் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.,! இதற்காக சிபிஐ., அதிகாரிகள் ஷில்லாங் வந்துள்ளனர்.

மேற்குவங்கத்தை புரட்டிப் போட்ட சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது சிபிஐ.,! இந்த சிட்பண்ட் மோசடி விவகாரத்தில், ஆளும் கட்சிக்கு பாதகமான பல ஆதாரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அவற்றை அழித்து விட்டார் ராஜீவ் குமார் என்று சிபிஐ., குற்றம் சாட்டுகிறது.

ராஜீவ் குமார், இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப் பட்ட சிறப்புக் குழுவின் தலைவராக விசாரணை மேற்கொண்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரிடம் நேரில் தாங்களே போய் விசாரிக்க அவர் அலுவலகம் சென்றனர் சிபிஐ அதிகார்கள்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

அப்போது கோல்கத்தா போலீசாரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு முதல்வர் மம்தாவின் உத்தரவே காரணம் என்று கூறப் படுகிறது.

இதனால் சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வைத்து இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்று தீர்மானித்த உச்ச நிதிமன்றம், இரு தரப்புக்கும் பொதுவான இடமாக ஷில்லாங்கை தேர்வு செய்து அங்கேயே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறியது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி,சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர். இதற்காக தில்லியிலிருந்து மேகாலாயா மாநில தலைநகர் ஷில்லாங் வந்துள்ளனர்.

ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அவரிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகள் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kolkata Police Commissioner Rajeev Kumar will be questioned in Shillong by the CBI today over his alleged role in destroying evidence related to the Saradha chit fund scam. The Supreme Court had fixed the Meghalaya capital as the venue for his interrogation, saying that its “neutral” status will prevent unnecessary controversy.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

Topics

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

Entertainment News

Popular Categories