December 6, 2025, 3:12 AM
24.9 C
Chennai

கோல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று சிபிஐ நடத்துகிறது விசாரணை!

mamata rajeev kumar - 2025

ஷில்லாங்: கோல்கத்தா நகர் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.,! இதற்காக சிபிஐ., அதிகாரிகள் ஷில்லாங் வந்துள்ளனர்.

மேற்குவங்கத்தை புரட்டிப் போட்ட சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது சிபிஐ.,! இந்த சிட்பண்ட் மோசடி விவகாரத்தில், ஆளும் கட்சிக்கு பாதகமான பல ஆதாரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அவற்றை அழித்து விட்டார் ராஜீவ் குமார் என்று சிபிஐ., குற்றம் சாட்டுகிறது.

ராஜீவ் குமார், இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப் பட்ட சிறப்புக் குழுவின் தலைவராக விசாரணை மேற்கொண்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரிடம் நேரில் தாங்களே போய் விசாரிக்க அவர் அலுவலகம் சென்றனர் சிபிஐ அதிகார்கள்.

அப்போது கோல்கத்தா போலீசாரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு முதல்வர் மம்தாவின் உத்தரவே காரணம் என்று கூறப் படுகிறது.

இதனால் சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வைத்து இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்று தீர்மானித்த உச்ச நிதிமன்றம், இரு தரப்புக்கும் பொதுவான இடமாக ஷில்லாங்கை தேர்வு செய்து அங்கேயே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறியது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி,சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர். இதற்காக தில்லியிலிருந்து மேகாலாயா மாநில தலைநகர் ஷில்லாங் வந்துள்ளனர்.

ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அவரிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகள் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kolkata Police Commissioner Rajeev Kumar will be questioned in Shillong by the CBI today over his alleged role in destroying evidence related to the Saradha chit fund scam. The Supreme Court had fixed the Meghalaya capital as the venue for his interrogation, saying that its “neutral” status will prevent unnecessary controversy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories