மோதிப் பார்க்க நினைத்தவர்… மோதியைப் பார்த்து அலறுகிறார்!

vijay mallya - 2026

பிரதமர் மோதியுடன் மோதிப் பார்க்க நினைத்தவர் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா. இப்போது, நாடு விட்டு நாடு சென்று வேறு வழியின்றி மோதியிடம் சரண்டர் ஆகியிருக்கிறார்.

லண்டனில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப் பட்ட நிலையில், தற்போது அவர் தனது சொத்துகளை வங்கிகள் தங்களுக்கு எவ்வளவு சேர வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொண்டு, மீதத்தை தரலாமே என்று கெஞ்சுகிறார். வங்கிகள் தங்களது ரூ.9 ஆயிரம் கோடியை மல்லையா ஏமாற்றிவிட்டார் என்று கூறுகின்றன.

ஆனால், தனக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கிறது. அவற்றை எடுத்துக் கொண்டு விடுவிக்கலாமே என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், மல்லையா போட்ட சில டிவீட்கள் இந்தக் கதறல் கதையை வெளியுலகுக்குக் கூறியுள்ளது.

விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை செய்துள்ளார் ஒரு பதிவில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியின் நடப்பு நாடாளுமன்றத்தின் நிறைவுப் பேச்சை கேட்டேன். எனது கவனத்துக்கு இது வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் தான்! அப்பொழுது ஒன்றை கவனித்தேன் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபர் 9 ஆயிரம் கோடியை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார் என்று குறிப்பிட்டார்! அந்த நபர் நான் தான் என்று ஊடகங்கள் எண்னைக் குறிப்பிட்டு சொல்லுகின்றன

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

முந்தைய ட்வீட்டிலிருந்து இதையும் சேர்த்துப் படிக்கவும். நான் மதிப்புடன் கூறிக் கொள்வது என்னவென்றால் பிரதமர் ஏன் வங்கிகளுக்கு கட்டளை இடக்கூடாது..? என்னுடைய பணத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்களின் பணத்தை வங்கிகள் முழுவதுமாக ஏன் திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடாது?

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பொதுமக்களின் பணத்தை ஏன் முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அதை பிரதமர் ஏன் வங்கிகளுக்கு வலியுறுத்தாமல் இருக்கிறார்?

இதை நான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன் நான் கர்நாடகத்தின் உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நேர்மையுடனும் முழு மனதுடனும் இதை நான் சம்மதிக்கிறேன்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

ஏன் வங்கிகள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கொடுத்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை? அமலாக்கத்துறை நான் ஏதோ சொத்துக்களை மறைத்து வைத்திருப்பதாக கூறுகின்றன! அதனை ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன! அவ்வாறு நான் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தால் எப்படி 14 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துகளை நீதிமன்றத்தின் முன்னால் சமர்ப்பித்து இருக்க முடியும்?

இது பொது மக்களை தவறாக வழி நடத்துவதும் தவறான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுமாக உள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories