மோதிப் பார்க்க நினைத்தவர்… மோதியைப் பார்த்து அலறுகிறார்!

vijay mallya - 2026

பிரதமர் மோதியுடன் மோதிப் பார்க்க நினைத்தவர் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா. இப்போது, நாடு விட்டு நாடு சென்று வேறு வழியின்றி மோதியிடம் சரண்டர் ஆகியிருக்கிறார்.

லண்டனில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப் பட்ட நிலையில், தற்போது அவர் தனது சொத்துகளை வங்கிகள் தங்களுக்கு எவ்வளவு சேர வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொண்டு, மீதத்தை தரலாமே என்று கெஞ்சுகிறார். வங்கிகள் தங்களது ரூ.9 ஆயிரம் கோடியை மல்லையா ஏமாற்றிவிட்டார் என்று கூறுகின்றன.

ஆனால், தனக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கிறது. அவற்றை எடுத்துக் கொண்டு விடுவிக்கலாமே என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், மல்லையா போட்ட சில டிவீட்கள் இந்தக் கதறல் கதையை வெளியுலகுக்குக் கூறியுள்ளது.

விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை செய்துள்ளார் ஒரு பதிவில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியின் நடப்பு நாடாளுமன்றத்தின் நிறைவுப் பேச்சை கேட்டேன். எனது கவனத்துக்கு இது வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் தான்! அப்பொழுது ஒன்றை கவனித்தேன் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபர் 9 ஆயிரம் கோடியை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார் என்று குறிப்பிட்டார்! அந்த நபர் நான் தான் என்று ஊடகங்கள் எண்னைக் குறிப்பிட்டு சொல்லுகின்றன

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

முந்தைய ட்வீட்டிலிருந்து இதையும் சேர்த்துப் படிக்கவும். நான் மதிப்புடன் கூறிக் கொள்வது என்னவென்றால் பிரதமர் ஏன் வங்கிகளுக்கு கட்டளை இடக்கூடாது..? என்னுடைய பணத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்களின் பணத்தை வங்கிகள் முழுவதுமாக ஏன் திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடாது?

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பொதுமக்களின் பணத்தை ஏன் முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அதை பிரதமர் ஏன் வங்கிகளுக்கு வலியுறுத்தாமல் இருக்கிறார்?

இதை நான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன் நான் கர்நாடகத்தின் உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நேர்மையுடனும் முழு மனதுடனும் இதை நான் சம்மதிக்கிறேன்!

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஏன் வங்கிகள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கொடுத்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை? அமலாக்கத்துறை நான் ஏதோ சொத்துக்களை மறைத்து வைத்திருப்பதாக கூறுகின்றன! அதனை ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன! அவ்வாறு நான் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தால் எப்படி 14 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துகளை நீதிமன்றத்தின் முன்னால் சமர்ப்பித்து இருக்க முடியும்?

இது பொது மக்களை தவறாக வழி நடத்துவதும் தவறான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுமாக உள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories