மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வுக்கு கோரிக்கை!

Published:

masood azhar - 2026

காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வுக்கு இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரது செயல்பாட்டுக்கு தடை விதிக்கும்படி ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மசூத் அசாருக்கு முழு சுதந்திரம் அளித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதத் தேவையான உதவிகளை பாகிஸ்தான் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அறிக்கையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

பாகிஸ்தானுடனான நட்புறவின் அடிப்படையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தொடர்ந்து ஐ.நா.வில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது சீனா!

தொடந்து சீனாவிடம் சொல்லிப் பார்த்துவிட்ட நிலையில், கடந்த 2018ல் நடைபெற்ற வூஹான் உச்சிமாநாட்டுக்குப் பின்னர் இந்தியா மசூத் அசார் குறித்த விவகாரத்தை சீனாவுடன் எழுப்பவில்லை!

இந்தக் காரணங்களாலேயே ஐ.நா.வில் மசூத் அசார் குறித்து இதுவரை இந்தியா எழுப்பிய கோரிக்கைகள் கவனிக்கப்படாமலேயே போயிருக்கிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img