December 6, 2025, 4:19 AM
24.9 C
Chennai

பாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு! அன்றே சொன்னவர் சு.சுவாமி!

subramanian swamy - 2025

பாகிஸ்தானை 4 நாடுகளாகப் பிரிப்பது ஒன்றே இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று சொன்னார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

கடந்த 2017 டிசம்பரில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு குறித்த பிரச்னை எழுந்தபோது சொன்னது… ஐஎஸ் அமைப்பு மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகும் என்று! அது நிறைவேறுமா நிறைவேறாதா என்பது பிரச்னையல்ல, ஆனால் அதற்கான முயற்சியை அவர்கள் நிச்சயம் செய்வார்கள். எனவே அதற்குத் தகுந்த வகையில் அதை எதிர்கொள்ளத் தயாராக நாம் இருக்க வேண்டும்!

நாம் மீண்டும் பாகிஸ்தானின் நிலப்பரப்பு விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது. வங்கதேசத்தைப் பிரித்த போது என்ன செய்தோமோ அது போல் இப்போதும் செய்ய வேண்டிய தேவையுள்ளது. வங்கதேசத்தில் என்ன நடந்ததோ அது போல் இப்போதும் சிந்து, பலுசிஸ்தானில் மக்கள் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள். எனவே, பாகிஸ்தானை 4 நாடுகள் ஆகப் பிரிக்க வகை செய்ய வேண்டும்.

பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இது ஒன்றே வழி.

நாம் நம் முன் உள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டோம். நம்முன் இப்போது வேறு எந்த வழியும் இல்லை. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் கைகோத்துச் செல்ல வேண்டும். பயங்கரவாத வேரறுப்பில் இயல்பான கூட்டாளியாக அமெரிக்காவே இருக்கும். எனவே இது குறித்து நம் அரசு சிந்திக்க வேண்டும்.

ஏற்கெனவே உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் முன்வைத்ததை இங்கே வலியுறுத்துகிறேன். பாகிஸ்தானை பயங்கரவாத ஊக்குவிப்பு நாடு என்று நாம் பகிரங்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

மேலும், பாகிஸ்தானுக்கு நாம் வழங்கியுள்ள வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும். தற்போது பாகிஸ்தானின் சிமிண்ட் இங்கே அதிகளவில் வருகின்றது. அது, நம் நாட்டு சிமிண்ட்டை விட விலை மலிவாக உள்ளது. எனவே மேலும் மேலும் சிமிண்டை இங்கே குவிக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களுக்கே பயன்படுத்துகிறது.

பாகிஸ்தானுடனான தேவையற்ற தொடர்புகளை நாம் துண்டிக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்கள் இங்கே வருவதும் டான்ஸ் ஆடுவதும் பாடுவதும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு பொழுது போக்குவதும் நிறுத்தப்பட வேண்டும். சினிமா தொடர்பும் கிரிக்கெட் விளையாட்டும் பாகிஸ்தானுடன் உறவு மேம்பட நமக்கு எந்த விதத்திலும் பலன்களைத் தராது என்பதால் இவற்றை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். …

  • இப்படி இரு வருடங்களுக்கு முன்னர் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது, இந்திய அரசு பாகிஸ்தான் தொடர்பிலான ஒரு மிகப் பெரும் தாக்குதலை சந்தித்ததைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுப்பிரமணியன் சுவாமி அன்று நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி..

 PM Enough is enufPak humiliating Mother Wife of EAM busy Giving Visa to Sick Pakis Now NaMo Govt must Declare Pakistan Terrorist State & Remove MFN given toimmediately & Pass Bill Presented By Sir Dr

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories