21-03-2023 9:05 PM
More
    Homeஇந்தியாரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!

    To Read in other Indian Languages…

    ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!

    chidambaram - Dhinasari Tamil

    ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
    பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

    முன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என்றும் கேட்டிருந்தார்.

    பிரதமர் மோடி, விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என நேற்று பீகார் மற்றும் உபி.,யில் நடைபெற்ற பேரணிகளில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

    பயங்கரவாதிகளின் முகாம்கள்  மீதான தாக்குதலில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை குறித்து விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற  மறுத்து விட்டார் என்று கூறிய ப.சிதம்பரம்,  பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350  வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை  பரப்பியது யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    மேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர்
    ராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.


    [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”39″ order=”desc”]


    இந்நிலையில் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியக் குடிமகனாக இருந்து  கொண்டு ராணுவத்தை குறை சொல்வது
    கண்டனத்துக்குரியது என்றார்.

    இன்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் ஆதரவாக பேசும் ப.சிதம்பரத்துக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

    நம் நாடு குறித்து சிதம்பரம் போன்றோர் இவ்வாறு கேள்வி எழுப்புவது வெட்கக் கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்று கூறிய பியூஷ்
    கோயல், சரியான முடிவு எடுத்து மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று
    நம்பிக்கை தெரிவித்தார்.

    பயங்கரவாதத்தால் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது! இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார் என்று கூறினார் பியூஷ் கோயல்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    4 + fourteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...