ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!

chidambaram - 2026

ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என்றும் கேட்டிருந்தார்.

பிரதமர் மோடி, விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என நேற்று பீகார் மற்றும் உபி.,யில் நடைபெற்ற பேரணிகளில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

பயங்கரவாதிகளின் முகாம்கள்  மீதான தாக்குதலில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை குறித்து விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற  மறுத்து விட்டார் என்று கூறிய ப.சிதம்பரம்,  பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350  வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை  பரப்பியது யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

மேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர்
ராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”39″ order=”desc”]


இந்நிலையில் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியக் குடிமகனாக இருந்து  கொண்டு ராணுவத்தை குறை சொல்வது
கண்டனத்துக்குரியது என்றார்.

இன்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் ஆதரவாக பேசும் ப.சிதம்பரத்துக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

நம் நாடு குறித்து சிதம்பரம் போன்றோர் இவ்வாறு கேள்வி எழுப்புவது வெட்கக் கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்று கூறிய பியூஷ்
கோயல், சரியான முடிவு எடுத்து மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று
நம்பிக்கை தெரிவித்தார்.

பயங்கரவாதத்தால் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது! இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார் என்று கூறினார் பியூஷ் கோயல்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Entertainment News

Popular Categories