ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!

chidambaram - 2026

ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என்றும் கேட்டிருந்தார்.

பிரதமர் மோடி, விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என நேற்று பீகார் மற்றும் உபி.,யில் நடைபெற்ற பேரணிகளில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

பயங்கரவாதிகளின் முகாம்கள்  மீதான தாக்குதலில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை குறித்து விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற  மறுத்து விட்டார் என்று கூறிய ப.சிதம்பரம்,  பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350  வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை  பரப்பியது யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர்
ராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”39″ order=”desc”]


இந்நிலையில் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியக் குடிமகனாக இருந்து  கொண்டு ராணுவத்தை குறை சொல்வது
கண்டனத்துக்குரியது என்றார்.

இன்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் ஆதரவாக பேசும் ப.சிதம்பரத்துக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

நம் நாடு குறித்து சிதம்பரம் போன்றோர் இவ்வாறு கேள்வி எழுப்புவது வெட்கக் கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்று கூறிய பியூஷ்
கோயல், சரியான முடிவு எடுத்து மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று
நம்பிக்கை தெரிவித்தார்.

பயங்கரவாதத்தால் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது! இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார் என்று கூறினார் பியூஷ் கோயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories