தாங்கள்தான் இம்ரானுக்கு சொறிந்து விடுகிறார்கள் என்றால்… அபிநந்தன் பெயரிலுமா?

Published:

fake accounts abhinandan - 2026

புது தில்லி: இம்ரான் கானுக்கு முதுகு சொறிந்துவிட இணையதளங்களில் அவரைப் பாராட்டி ராப்பகல் கண் தூக்கம் இல்லாமல் செயலாற்றி வருபவர்கள் இப்போது அபிநந்தன் பெயரில் அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் விமானப் படை வீரர் அபிநந்தன் பெயரில் போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் நிறைய உலவுவதாகவும், அபிநந்தன் சமூக
வலை தளங்களில் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அவர் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்’ என்றும் இந்திய விமானப்படை எச்சரித்துள்ளது.

சாகச வீரர் அபிநந்தன் பெயரில் பலர் போலியாக அவரது படத்தைப் பதிவு செய்து, அவர் பெயரில் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவற்றின் மூலம் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக, தாங்கள் செய்ய வேண்டிய இம்ரான் கானுக்கு கால் கழுவும் வேலையை அபிநந்தன் பெயரில் செய்து வருவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Abhinandan Varthaman to get Bhagwan Mahavir Ahimsa Puraskar - 2026

அபிநந்தன் பெயரில் கணக்கு துவங்கி, அதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டி பதிவுகளை இட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, இந்திய விமான படையின், ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, எந்த சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை. எனவே, அவர் பெயரில் போலி கணக்குகள் துவக்கி, பரப்பப்படும் பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப் பட்டுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img