புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்!

raveesh kumar - 2026

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

பிப்.26ஆம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன! அத்துடன், அதில் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

வான் எல்லையில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதில் தான் விமானி அபிநந்தன் சென்றதாகத் தெரியவருகிறது.

ஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவந்தது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

மேலும் அவர் கூறிய போது, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக் கொள்ளுமேயானால், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும்!

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் கூட, அதை மறுப்பதன் மூலம், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா!?

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்றுதான்!, எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது.

இந்தியா நடத்திய ராணுவ ரீதியில் அல்லாத, பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலின் நோக்கம் திட்டமிட்டபடி நிறைவேறியது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் உறுதியை இது வெளிப்படுத்துகின்றது என்றார் ரவீஸ் குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories