புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்!

raveesh kumar - 2026

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

பிப்.26ஆம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன! அத்துடன், அதில் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

வான் எல்லையில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதில் தான் விமானி அபிநந்தன் சென்றதாகத் தெரியவருகிறது.

ஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவந்தது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

மேலும் அவர் கூறிய போது, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக் கொள்ளுமேயானால், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும்!

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் கூட, அதை மறுப்பதன் மூலம், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா!?

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்றுதான்!, எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது.

இந்தியா நடத்திய ராணுவ ரீதியில் அல்லாத, பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலின் நோக்கம் திட்டமிட்டபடி நிறைவேறியது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் உறுதியை இது வெளிப்படுத்துகின்றது என்றார் ரவீஸ் குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories