காங்கிரசின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருக்கும் புகைப்படத்தையும், ருத்ரக்ஷா மணியை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படங்கள் பா.ஜ.க பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அல்டஸ் நியூஸ் என்ற பத்திரிகை இந்த புகைப்படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பிரியங்கா காந்தி சிலுவை அணியவில்லை என்று தெரிவித்துள்ளது.




