புதுதில்லி: பாஜக.,வின் தேர்தல் அறிக்கை சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரில் வெளியானது.
தேர்தல் அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பாஜக.,தலைவர் அமித்ஷா, பாஜக.,வின் தேர்தல் அறிக்கைக்கு பெயர் சங்கல்ப பத்ரா. அதாவது உறுதிமொழிப் பத்திரம். பாஜக.,வின் 5 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளோம். 2014-19 காலக் கட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். பாஜக., ஆட்சியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். 50 கோடி