கணவனின் கருப்பு கலர் பிடிக்கலையாம்: தீர்த்துக் கட்டிய மனைவி கைது

அனந்த்:
கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் பெட்லாட் தாலுகா, சுந்தரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பர்ஸானா பானு. 22 வயதாகும் இவர், தனது கணவர் ஃபரூக் மாலேக் என்ற 22 வயதுக் கணவனை குத்திக் கொன்றுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், அவரது கருப்பு தோல் கலர் பிடிக்கவில்லை என்பதுதானாம். இதனை பேட்லாட் தாலுகா டிஎஸ்பி பி ஆர். கேலாட் கூறியுள்ளார்.
பர்ஸானா, ஃபரூக் இருவருமே  2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஃபரூக்கின் தோல் கலர் பர்ஸானாவுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இருவருமே உடலுறவு கொள்ளவில்லை என்பதுடன், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுமாம்.
இதனிடையே அவரது கணவரை தவிர்ப்பதற்காக, பர்ஸானா தனது பெற்றோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். இதனிடையே 10 தினங்களுக்கு முன்னர் கணவன் வீட்டுக்கு திரும்பிய பர்ஸானாவுடன், ஃபரூக் உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், பர்ஸானா அதனை மறுத்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அன்று பர்ஸானாவை ஃபரூக் தாக்கியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று தனது வயல் புறத்துக்கு வருமாறு பர்ஸானாவை அழைத்துள்ளார் ஃபரூக். ஆனால், பர்ஸானா ஒரு சுத்தியலை எடுத்து ஃபரூக்கை தலையில் தாக்கியுள்ளார். இதில் ஃபரூக் உயிரிழந்தார்.
இதை அடுத்து பர்ஸானாவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது, 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories