December 6, 2025, 3:19 PM
29.4 C
Chennai

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்ணியமற்று நடக்கிறார்கள்! சிவசேனாவுக்கு தாவிய பிரியங்கா!

priyanka chaturvedi - 2025

புது தில்லி : காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கின்றார்கள். இந்தப் புகாரை எத்தனை முறை கட்சித் தலைமையிடம் கொடுத்தும் அது, கண்டுகொள்ளவில்லை என்று கூறி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து சிவசேனைக்குத் தாவியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர், அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.வேணுகோபாலிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன். இளைஞர் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அதை நிறைவேற்ற 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இந்த பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், குழந்தைகள் உள்ளிட்ட எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் கடந்த சில வாரங்களாக எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை எடுத்துச் சொல்லியும் கட்சித் தலைமையும் கட்சியின் மேலிடமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றிய பிரியங்கா சதுர்வேதியின் ராஜினாமா மற்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது, ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் அவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏதாவது அரசியல் பின்புலத்தில் இருந்தாக வேண்டிய நிலையில், பிரியங்கா சதுர்வேதி தற்போது உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களில் பிரியங்கா சதுர்வேதியின் முடிவும் குற்றச்சாட்டுகளும் பட்டிமன்றப் புயலைக் கிளப்பியுள்ளது.

1 COMMENT

  1. என்ன சார், நீங்களும் திகிலான தலைப்பு செய்தி கொடுக்கிறீர்களோ என்று செய்தியை விறுவிறுப்புடன் படித்தேன், ஆனால் பிரியங்கா சதுர்வேதி என்று முடித்துவிட்டீர்களே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories