காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்ணியமற்று நடக்கிறார்கள்! சிவசேனாவுக்கு தாவிய பிரியங்கா!

priyanka chaturvedi - 2026

புது தில்லி : காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கின்றார்கள். இந்தப் புகாரை எத்தனை முறை கட்சித் தலைமையிடம் கொடுத்தும் அது, கண்டுகொள்ளவில்லை என்று கூறி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து சிவசேனைக்குத் தாவியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர், அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.வேணுகோபாலிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன். இளைஞர் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அதை நிறைவேற்ற 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இந்த பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், குழந்தைகள் உள்ளிட்ட எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் கடந்த சில வாரங்களாக எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை எடுத்துச் சொல்லியும் கட்சித் தலைமையும் கட்சியின் மேலிடமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றிய பிரியங்கா சதுர்வேதியின் ராஜினாமா மற்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது, ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் அவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏதாவது அரசியல் பின்புலத்தில் இருந்தாக வேண்டிய நிலையில், பிரியங்கா சதுர்வேதி தற்போது உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களில் பிரியங்கா சதுர்வேதியின் முடிவும் குற்றச்சாட்டுகளும் பட்டிமன்றப் புயலைக் கிளப்பியுள்ளது.

1 COMMENT

  1. என்ன சார், நீங்களும் திகிலான தலைப்பு செய்தி கொடுக்கிறீர்களோ என்று செய்தியை விறுவிறுப்புடன் படித்தேன், ஆனால் பிரியங்கா சதுர்வேதி என்று முடித்துவிட்டீர்களே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories