December 6, 2025, 4:21 PM
29.4 C
Chennai

மோடி விரித்த வலை.. சாம் பிட்ரோடா மூலம் வசமாய் சிக்கிய காங்கிரஸ்!

sam pitroda rahul - 2025

1971 இந்தியா பாகிஸ்தான் யுத்தம், அதுவரை இருந்த கிழக்கு பாகிஸ்தானை சாவுமணி அடித்து வங்க தேசம் உருவாகக் காரணமானது.

யாஹ்யா கானின் மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அரக்கத்தனம், பூட்டோவின் இது “1000 years war”- என்ற கொக்கரிப்பு எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வந்து வங்க தேசம் உருவாக உதவியது இந்தியா!

கற்பழிக்கப்பட்டுத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிழக்கு பாகிஸ்தான் பெண்கள்…

கற்பழிப்புக்கும் கொலைக்கும் அஞ்சித் தலை தெறிக்க ஓடி வந்து அகதியாகப் புகுந்த கிழக்கு பாகிஸ்தான் பெண்கள்…

கண் எதிரே மனைவியோ மகளோ கற்பழிக்கப்பட்டதைக் கண்டு பதைத்து ஓடி வந்த கிழக்கு பாகிஸ்தானிய ஆண்கள்…

Shoot the boys – Keep the girls என்று உத்தரவிட்ட பாகிஸ்தான் தளபதி நியாஸியின் ஆணைக்குத் தன் கணவனை, மகனை இழந்து, பாகிஸ்தான் படையால் கந்தல் துணியாக ஆக்கப்பட்டு, அகதியாக இங்கே ஓடி வந்த பெண்கள்…

அத்தனை பேரும் சுதந்திர வங்க தேசம் உருவான அந்த மகத்தான தருணத்தில்…

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை, காளி மாதாவாகக் கும்பிட்டனர்!

வாஜ்பாய் கூட நாடாளுமன்றத்திலேயே இந்திரா காந்தியை “துர்கா” என்று பாராட்டினார்!

அப்போதெல்லாம் யாரும் இது ராணுவத்தின் வெற்றிதானே? ஜெனரல் மானெக்ஷாவின் வெற்றிதானே? ஏர் மார்ஷல் லால் அவர்களின் வெற்றிதானே? கப்பற்படை தளபதி அட்மிரல் நந்தாவின் வெற்றிதானே? முப்படைகளின் இந்த மகத்தான சாகசத்தில் இந்திரா காந்திக்கு என்ன பங்கு?- என்று எவரும் கேட்கவில்லையே?

இந்திரா காந்தியின் ராஜதந்திரம் – நம்மிடம் வாலாட்டிய பாகிஸ்தானை அவர்கள் நாட்டையே சிதறடித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசமாக மாற்றிய மாபெரும் சாதனை புகழப்பட்டதே?

அது இயற்கைதான்! ஆட்சி செய்பவர்களே Strategic Decisions எடுக்கிறார்கள்! அரசுத் துறைகள் – ராணுவம் உட்பட அதை அமல்படுத்தும்! அதன் சாதக பாதகங்கள் ஆட்சியாளர்களையே சாரும்!

இந்த அடிப்படை ஞானம் அற்றுப் போன காங்கிரஸ் மிகச் சரியாக மோடி – அமித்ஷா விரித்த வலையில் விழுந்தது!

என்ன செய்திருக்க வேண்டும்?

“எங்கள் இந்திரா காந்தி இதை விடப் பெரிய அளவில், வாலாட்டிய பாகிஸ்தான் நாட்டையே துண்டம் போட்டு விட்டார்; வேண்டுமானால் மோடி பலூசிஸ்தானைத் துண்டாடி பாகிஸ்தானை சிதறடித்துக் காட்டட்டும்”- என்று சவால் விட்டிருக்க வேண்டும்!

மாறாக “சூரியக் கதிர் தாக்குதல் என்று ஒன்று நடந்ததா?”- “அபிநந்தனை விடுவிக்க நட்புக்கரம் நீட்டிய இம்ரான்கான்”— என்றெல்லாம் தடுமாறி, கடைசியில் “ராணுவம் என்ன மோடியின் அப்பன் வீட்டு சொத்தா? ராணுவம் நடத்திய பயங்கரவாத முறியடிப்புத் தாக்குதலுக்கு மோடிக்கு என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது?”- என்று முரண்பாட்டுச் சகதியில் சிக்கியது காங்கிரஸ்!

இதை… இதை… இதைத்தான் மோடி & அமித்ஷா எதிர்பார்த்தனர்!

“ராணுவம் என் அப்பன் வீட்டுச் சொத்து இல்லை – ஆனால் உங்கள் அப்பன்தான் ராணுவக் கப்பலில் குடும்ப சகிதம் பிக்னிக் போனார்”- என்று செமத்தியான மடக்கு!

அதேபோல் ஆயிரம் BJP Rally நடத்தி பஞ்சாப் – ஹரியானாவில் சீக்கிய மக்களிடையே ஏற்படுத்தி இருக்க வேண்டிய ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ உணர்வை… சாம் – பிட்ரோடா ஒரே வார்த்தையில் சீக்கியர்களை காங்கிரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்!

“1984 ல் இந்திரா கொல்லப்பட்டதும் சீக்கியருக்கு எதிரான கொலைவெறிக் கலவரம்?”

“84 ல் எப்பவோ நடந்தது – ஆமா, அதுக்கு என்ன இப்போ?!

சாம் பிட்ரோடாவின் பேட்டி BJP க்கு எதிர்பாராமல் கிடைத்த போனஸ்! இனி கேப்டன் அமரீந்தர் சிங்கே முயற்சித்தாலும் டெல்லி – ஹரியானா – பஞ்சாபில் காங்கிரசைக் காப்பாற்ற முடியாது!

மோடி விரித்த பிரசார வலையில் – ராணுவத்தின் சாதனைகள், பயங்கர வாதத்தை ஒடுக்குதல், சூரியக் கதிர் தாங்குதல் etc.. – வசமாக வந்து சிக்கியது காங்கிரஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories