தேர்தல் பிரசாரம் முடிந்தது! கேதார்நாத்தில் மோடி! சோம்நாத்தில் அமித் ஷா!

modi kedar - 2026புது தில்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே கேதார்நாத்துக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சோம்நாத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏழு கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி சனிக்கிழமை இன்று உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார். அதே போல், கட்சித் தலைவர் அமித் ஷாவும் இடைவிடாத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, இன்று காலை சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நாளை நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டமாக, 59 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதற்குச் சற்று முன்னதாக பாஜக. ,தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

modi kedarnath - 2026தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மறு நாளே பிரதமர் மோடி அவருக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத் சென்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மேகவெடிப்பு எனும் மாபெரும் பேய்மழையில் கேதார்நாத் பகுதியே தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. கேதார்நாத் ஊர் உருக்குலைந்தது. கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும், கோயிலை பின்னர் சீரமைத்து, கேதார்நாத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

கேதர்நாத் செல்வது பிரதமருக்கு இது புதிதல்ல. இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் முதன் முதலாகச் சென்றார். தொடர்ந்து, 2017 அக்டோபர், 2018 நவம்பர் என கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில், 16வது நாடாளுமன்றத்தின் பிரதமராக பதவியை நிறைவு செய்யும் தறுவாயில் கேதார்நாத் சென்று, சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கிறார். தற்போது மோடி சென்றுள்ளது 4 வது முறை.

தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை நாளை பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று, தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.

இந்நிலையில் நாளை ஞாயிறு கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு, முடிவுகள் வெளியாகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories