February 22, 2026, 4:34 AM
25.6 C
Chennai

தேர்தல் பிரசாரம் முடிந்தது! கேதார்நாத்தில் மோடி! சோம்நாத்தில் அமித் ஷா!

modi kedar - 2026புது தில்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே கேதார்நாத்துக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சோம்நாத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏழு கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி சனிக்கிழமை இன்று உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார். அதே போல், கட்சித் தலைவர் அமித் ஷாவும் இடைவிடாத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, இன்று காலை சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நாளை நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டமாக, 59 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதற்குச் சற்று முன்னதாக பாஜக. ,தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

modi kedarnath - 2026தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மறு நாளே பிரதமர் மோடி அவருக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத் சென்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மேகவெடிப்பு எனும் மாபெரும் பேய்மழையில் கேதார்நாத் பகுதியே தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. கேதார்நாத் ஊர் உருக்குலைந்தது. கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும், கோயிலை பின்னர் சீரமைத்து, கேதார்நாத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

கேதர்நாத் செல்வது பிரதமருக்கு இது புதிதல்ல. இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் முதன் முதலாகச் சென்றார். தொடர்ந்து, 2017 அக்டோபர், 2018 நவம்பர் என கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில், 16வது நாடாளுமன்றத்தின் பிரதமராக பதவியை நிறைவு செய்யும் தறுவாயில் கேதார்நாத் சென்று, சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கிறார். தற்போது மோடி சென்றுள்ளது 4 வது முறை.

தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை நாளை பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று, தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.

இந்நிலையில் நாளை ஞாயிறு கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு, முடிவுகள் வெளியாகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories