December 6, 2025, 12:08 AM
26 C
Chennai

தேர்தல் பிரசாரம் முடிந்தது! கேதார்நாத்தில் மோடி! சோம்நாத்தில் அமித் ஷா!

modi kedar - 2025புது தில்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே கேதார்நாத்துக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சோம்நாத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏழு கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி சனிக்கிழமை இன்று உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார். அதே போல், கட்சித் தலைவர் அமித் ஷாவும் இடைவிடாத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, இன்று காலை சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நாளை நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டமாக, 59 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதற்குச் சற்று முன்னதாக பாஜக. ,தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

modi kedarnath - 2025தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மறு நாளே பிரதமர் மோடி அவருக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத் சென்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மேகவெடிப்பு எனும் மாபெரும் பேய்மழையில் கேதார்நாத் பகுதியே தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. கேதார்நாத் ஊர் உருக்குலைந்தது. கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும், கோயிலை பின்னர் சீரமைத்து, கேதார்நாத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

கேதர்நாத் செல்வது பிரதமருக்கு இது புதிதல்ல. இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் முதன் முதலாகச் சென்றார். தொடர்ந்து, 2017 அக்டோபர், 2018 நவம்பர் என கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில், 16வது நாடாளுமன்றத்தின் பிரதமராக பதவியை நிறைவு செய்யும் தறுவாயில் கேதார்நாத் சென்று, சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கிறார். தற்போது மோடி சென்றுள்ளது 4 வது முறை.

தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை நாளை பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று, தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.

இந்நிலையில் நாளை ஞாயிறு கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு, முடிவுகள் வெளியாகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories