எங்களை என்ன போக்கத்தவங்கன்னு நெனச்சிட்டீங்களா? ஊடகங்களை மிரட்டும் முதலமைச்சர்!

02 June16 Kumarasamy - 2026

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை சிறுமைப் படுத்துவதற்கு நீங்கள் யார்? உங்களை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மைசூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், ஊடகங்களை கடுமையாக சாடிப் பேசினார். ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த ஊடகங்களான நீங்கள் யார் என்றும் கேள்வி எழுப்பியதுடன், அரசியல்வாதிகளான எங்களை வேலை வெட்டி இல்லாதவர்களாக நீங்கள் நினைக்கிறீர்களா என்றும் மிரட்டினார்.

மேலும், நாங்கள் என்ன நீங்கள் வரையும் கார்ட்டூன் சித்திரங்கள் போல உங்களுக்குத் தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாகக் காட்ட உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? எங்களை சிறுமைப்படுத்தி எழுதவும் காட்டவும் நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்று மிரட்டல் தொனியில் பேசினார் குமாரசாமி. ஒரு மாநில முதல்வர் இவ்வாறு பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போது, காங்கிரஸ் மஜத., கூட்டணி இடையே விரிசல் பெரிதாகி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, இந்தக் கூட்டணி அனேகமாக கழன்று கொள்ளும் என்றும், பாஜக.,வுடன் சேர்ந்து குமாரசாமி அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப் படுகிறது. மேலும், சித்தராமையாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை வெளியிடும் ஊடகங்களால் குமாரசாமி கடும் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆட்பட்டுள்ளார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

hdkumarasamy - 2026 hdk - 2026

மேலும் அண்மைக் காலமாக குமாரசாமி குறித்து கேலிச்சித்திரங்கள் அதிகம் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றால் கொதிப்படைந்துள்ளார் குமாரசாமி. சாதா குமாரசாமி இவர், ஹெச்டி (ஹை டெஃபனிஷன்) குமாரசாமி இவர் என்றெல்லாம் சமூக ஊடகங்களிலும் கேலிசித்திரங்கள் அதிகம் உலா வருகின்றன.

மேலும், மோடி குறித்து ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்தி வெளியிடுவதாகவும் தாக்கிப் பேசியுள்ளார். நாங்கள் கோயிலுக்குப் போனால்… கோயில் கோயிலாக ஓடுகிறார்கள் என்று செய்தி போடுகிறார்கள். மோடி கேதாருக்கும் பத்ரிநாத்துக்கும் போனால், அதை பெரிய செய்தியாக வெளியிடுகிறார்கள் என்று கொட்டித் தீர்த்துள்ளார் குமாரசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories