தகராறை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

 

 

vettu 2 - 2026

நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 40). இவர் நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்து பார்த்த சுடலைகண்ணுவை 8 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த சுடலைக்கண்ணுவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சுடலைக்கண்ணு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்டு உள்ளார்.

அந்த முன்விரோதத்தில் அவரை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுடலைக்கண்ணுவை வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories