எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் இல்லங்களுக்குச் சென்று ஆசி பெற்ற பிரதமர் மோடி!

modi met advaniji - 2026

மக்களவைத் தேர்தலில் பாஜக., மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றிகளுக்கு அடித்தளம் இட்ட கட்சியின் மூத்த தலைவர்களான லால் கிஷன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக., மட்டுமே தனித்து 302 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று காலை கட்சியின் மூத்த தலைவரும், இத்தகைய வெற்றிகளுக்கு அடித்தளம் இட்டவருமான லால் கிஷண் அத்வானியை அவரது
இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி இன்று பெற்றுள்ள வெற்றிக்கு காரணம், அத்வானி போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பல ஆண்டுகளாக கட்சியை வளர்த்ததுதான் என்று தெரிவித்தார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

joshi modi - 2026

மேலும் தனது சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவிலும் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாஜக., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் சந்தித்து ஆசி பெற்றனர். தனது இல்லத்துக்கு வந்த பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வரவேற்ற முரளி மனோகர் ஜோஷி, அவருக்கு தன் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.mmjoshi modi - 2026

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோடி, முரளி மனோகர் ஜோஷி, மிகப்பெரும் அறிவாளி என்றும், கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்றும், தாம் உட்பட பல பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாகவும் டிவிட்டர் பதிவில் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னர் கடந்த தேர்தலின் போது, தனது தொகுதியான வாராணசி தொகுதியை, மோடிக்காக விட்டுக் கொடுத்து, போட்டியிட ஊக்குவித்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories