December 5, 2025, 12:44 PM
26.9 C
Chennai

எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் இல்லங்களுக்குச் சென்று ஆசி பெற்ற பிரதமர் மோடி!

modi met advaniji - 2025

மக்களவைத் தேர்தலில் பாஜக., மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றிகளுக்கு அடித்தளம் இட்ட கட்சியின் மூத்த தலைவர்களான லால் கிஷன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக., மட்டுமே தனித்து 302 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று காலை கட்சியின் மூத்த தலைவரும், இத்தகைய வெற்றிகளுக்கு அடித்தளம் இட்டவருமான லால் கிஷண் அத்வானியை அவரது
இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி இன்று பெற்றுள்ள வெற்றிக்கு காரணம், அத்வானி போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பல ஆண்டுகளாக கட்சியை வளர்த்ததுதான் என்று தெரிவித்தார்.

joshi modi - 2025

மேலும் தனது சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவிலும் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாஜக., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் சந்தித்து ஆசி பெற்றனர். தனது இல்லத்துக்கு வந்த பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வரவேற்ற முரளி மனோகர் ஜோஷி, அவருக்கு தன் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.mmjoshi modi - 2025

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோடி, முரளி மனோகர் ஜோஷி, மிகப்பெரும் அறிவாளி என்றும், கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்றும், தாம் உட்பட பல பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாகவும் டிவிட்டர் பதிவில் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னர் கடந்த தேர்தலின் போது, தனது தொகுதியான வாராணசி தொகுதியை, மோடிக்காக விட்டுக் கொடுத்து, போட்டியிட ஊக்குவித்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories