
வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணி முதல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
#BudgetDay2019 17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் .. சில முக்கிய அம்சங்கள்…
கல்வி ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளையும் தேசிய ஆராய்ச்சிக் கட்டளை ஒருங்கிணைக்கும்
கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்
தற்போது 3 இந்திய கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்கு முன்னேறியுள்ளன
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க “இந்தியாவில் பயிலுங்கள்” திட்டம்
“விளையாடு இந்தியா” திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்
பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி
எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை
மரபுசார் தொழிற்பயிற்சி மற்றும் 3d, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு உட்பட துறைகளிலும் பயிற்சி
நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் ஆப் நிறுவனமாகவே தொடங்கப்படும்


